Friday, November 27, 2020

சோழர் கோயில்கள்

 கொற்கை

               வரலாற்றுப் புகழ்மிக்க #கொற்கை பாண்டியர்களின் துறைமுகம் மட்டுமல்லாமல் பழம் பெரும் வணிக நகரமாகவும் இருந்து உள்ளது . "தன்பொருநை " ஆறு கடலில்  கலக்கும் இடத்தில் , முன்பு அமைந்து இருந்தது இந்நகரம் . கிரேக்கர்கள் முதன் முதலில் வந்து இறங்கியது இங்கு தான் . அதனால் இந்த நகரை பற்றிய செய்திகள் நம்மை விட கிரேக்க வணிகர்களின் குறிப்புகளில் அதிகம் காணப்படுகிறது . அவர்களின் குறிப்பில் தாமிரபரணி  ஆற்றிற்கு வடக்கே இந்த நகரம் இருந்ததாக கூறப்படுகிறது . பிற்காலத்தில்  கடலின் நீர் மட்டம் உயர்ந்ததால் ஏற்பட்ட மாற்றத்தால் கொற்கைக்கும் கடலுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது . அந்த இடைவெளியில் ஏற்பட்ட  ஒரு புதிய நகரம் தான் காயல் . இந் நகரமும் வணிகத்தில் சிறந்து விளங்கியது . கொற்கை , காயல் இரண்டு நகருமே தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் இருந்த மிகப்பெரிய வணிக நகரம் ஆகும் . 


தமிழரின் தொன்மையை பறைசாற்றும் ஆதித்தநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களுக்கு அருகில் இவ்வூர்  இருப்பது கூடுதல் சிறப்பு .கொற்கை என்றால் "படைகளின் கூடாரம்" என்று பொருள் . தற்போது குறிப்பிடத்தக்க இடமாக இல்லாமல் போனாலும் , 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் , அரேபியர்கள் சீனர்கள் , ரோமானியர்கள் வந்து வணிகம் செய்ய தங்கிய நகரம் இது . குதிரை வணிகம் , முத்து வணிகம் , மிளகு வணிகம் இன்னும் பல முக்கிய வணிகங்கள் நடந்த மிகப் பெரிய பெரிய நகரமாகும் . முத்து வணிகத்தில் தலைமையிடமாக கொற்கை விளங்கி இருக்கிறது . முத்து குளித்தல் இங்கு சிறப்பாக இருந்து இருக்கிறது . கொற்கை பற்றிய செய்திகள் கி.பி 80 ல் இந்தியாவிற்கு வந்த கிரேக்க அறிஞரான பெரிப்புளூஸ் மாரிஸ் ஏரித்தரேஸ் (Periplus Maris Erigthrace) தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் . கி.பி 130 இல் வாழ்ந்த நில நூல் அறிஞர் தாலமியும் இந்நகரை பற்றி செய்திகளை குறிப்பிட்டுள்ளார் .


#அக்கசாலை :

    கொற்கைக்கு அருகே உள்ள ஊர் "அக்கசாலை ". அக்கசாலை என்பது நாணயம் அச்சடிக்கும் இடம் ஆகும் . தற்போது "அக்காசாலை" என்று மருவி வழங்கப்படுகிறது . கார்டுவெல் இப்பகுதியை கொற்கையின் ஒரு பகுதியென்றும் , அங்கே பாண்டியர்களின் நாணயங்கள் அச்சிடப்பட்டதென்றும் குறிப்பிடுகிறார் . அக்கம் என்றால் பொன் என்று பொருள் . பொன் ,வெள்ளி , செம்பு உலோகங்களால் இங்கு நாணயங்கள் செய்யப்பட்டன . தாமிரபரணி ஆற்றங்கரையில்  நாணயங்கள் கிடைத்து இருக்கின்றன .


#ஈஸ்வரமுடையார்கோயில்    

    இங்கு ஒரு பழமையான சிவன் கோயில் உள்ளது . "அக்கசாலை ஈஸ்வரமுடையார் கோயில் " என்று வழங்கப்படும் இக்கோயிலில் தற்போது மூலவராக  விநாயகர் உள்ளார் . இக்கோயில் கல்வெட்டுகள் கொற்கையை " மதுரோதய நல்லூர் " என்று குறிப்பிடுகின்றன . பாண்டியர்களால் கட்டப்பட்டு பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு இருக்கலாம் .


#கண்ணகிகோயில் : 

 கண்ணகி கோயில் ஒன்றும் இங்கு உள்ளது .கோவலன் மதுரையில் கொலையுண்டதை கேள்விப்பட்ட கண்ணகி நெடுஞ்செழிய பாண்டியனிடம் நீதி கேட்டதும் , அவன் தன் தவறை உணர்ந்து உயிர் விட்டதும் , கோபத்தால் கண்ணகி மதுரையை எரித்ததும் நாம் அறிந்ததே . கொற்கை பண்டியநாட்டின் முக்கிய வணிக நகரமாகும் . அப்போது இங்கு இளவரசனாக இருந்த வெற்றிவேற் செழியன் பாண்டிய அரசு கட்டிலில் ஏறினான் என்றும் , பின்னர் பத்தினி தெய்வம் கண்ணகியை சாந்தப்படுத்த 1000 பொற்கொல்லர்களை பலியிட்டான் என்றும் கூறப்படுகிறது .மேலும் கண்ணகிக்கு இங்கு சிலை எடுத்தான் என்றும் அதற்கு "வெற்றிவேல் நங்கை " என்று பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது . "செழுமை நங்கை " என்பது செழியனின் நங்கை என்றும் , செழியன் வணங்கிய நங்கை என்றும் கூறப்படுகிறது . பழைய சிலை காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது . ஆனால் தற்போது இருப்பது தற்கால கோயிலும் , தற்கால கண்ணகி சிலையும் தான் .


 இவ்வளவு சிறப்பு மிக்க பகுதியில் அடுத்த வருடம் அகழ்வாராய்ச்சி நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .











நிச்சாம்பாளையம்



ஈரோட்டிற்கு மேற்கே 21கிமீ தொலைவில் திங்களூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நிச்சாம்பாளையம் கிராமம்.  இங்கு ஊருக்கு தெற்கே சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான பெருங்கற்கால  ஈமக்காடு உள்ளது. 


இந்த ஈமக்காட்டில் நிறைய கற்பதுக்கைகளும், மேலே கற்பலகைகள் கொண்டு மூடப்பட்ட ஈமத்தாழிகளும் நிறைய கிடைக்கின்றன. இங்கு மிகப்பெரிய 17அடி உயரமுள்ள குத்துக்கல் இரண்டு உள்ளன. அதனைச் சுற்றி கல்வட்டங்களும் காணப்படுகின்றன. நிறைய கல்வட்டங்கள் சிதைந்த நிலையிலும் கற்பதுக்கைகள் மண்மூடியும் காணப்படுகிறன. 


மேலும் இங்கு இரும்பு உருக்கு தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டதாக அகழாய்வு அறிக்கைகள் கூறுகின்றன. அதற்கேற்ப நிறைய இரும்பு உருக்கு எச்சங்களும் காணக்கிடைக்கின்றன.


#konguhistory 42






RALLIAH DAM, COONOOR, NILGIRIS

 

RALLIAH DAM, COONOOR, NILGIRIS

The dam was constructed and opened on 16th May 1941, by Sir Arthur Hope, then Governor of Madras. The Dam is located under The Coonoor Municipality jurisdiction. The Dam was built by Two Contractors The Hindustan Construction Company Limited, Bombay and The Nilgiri Engineering company Coonoor... The further details will be up dated shortly..









Wednesday, November 25, 2020

கொங்கு பெருவழிகள்

 கொங்கு பெருவழிகள்

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஒரு சில நெடுஞ்சாலைகளுக்கு  வயது 2500 ஆண்டுகளுக்கும் மேல் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...!?

ஆம். நம்பித்தான் ஆக வேண்டும்.

2500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானவை கொங்குப் பெருவழிகள் . 

பெருவழிகள் என்பது இன்றைய நெடுஞ்சாலைகளுக்கு ஒப்பாகும் . இப்பெருவழிகளை பண்டைய மக்கள் போக்குவரத்திற்காகவும் வணிகத்திற்காகவும் பயன்படுத்தினர் . இதனால் உள்நாட்டு அயல்நாட்டு வாணிகம் செழிப்புற நடந்தன . 

பண்டைய தமிழகத்தை மேற்கு கடற்கரையுடன் இணைக்க மேற்கு தொடர்ச்சி மலையைக் கடக்க ஏதுவான இடமாக கொங்கு நாட்டின் பாலக்காட்டு கணவாய் விளங்கியது . இந்த பாலக்காட்டு கணவாய் வழியாக மூன்று முக்கிய பெருவழிகள் சென்றன .

அவை 

1) பேரூர் , அவிநாசி , ஈரோடு ,சேலம் , தகடூர் , கோலார் வழியாக வடபகுதிக்கு சென்றது . 

2) வெள்ளலூர் , சூலூர் , கத்தாங்கண்ணி , கொடுமணல் , கரூர் , வேலையுதம்பளையம்  வழியாக உறையூர் சென்று அங்கிருந்து பூம்புகார் சென்றடைந்தது . இப்பெருவழி ராஜகேசரிப் பெருவழி என்றழைக்கப்பட்டது . 

3) ஆனைமலை , உடுமலை , கொழுமம் , பழனி , திண்டுக்கல் வழியாக மதுரை சென்று மேலும் இராமேஸ்வரம் , அழகன்குளம் மற்றும் கோடிக்கரையை சென்றடைந்தது . 

இம்மூன்றும் கொங்கின்  வழியாக சென்ற மிக முக்கிய பெருவழி ஆகும் . 

இவை தவிர 

மகிஷ மண்டலம் பெருவழி மைசூரிலிருந்து சத்தியமங்கலம் அருகிலுள்ள கஜலெட்டி கணவாய் வழியாக சேர தலைநகரான கரூரை அடைந்தது . அடுத்ததாக கர்நாடகத்தில் தொடங்கும் ஒரு பெருவழி காவேரிபுரம் மேட்டூர் கணவாய் வழியாக பயணித்து காவேரி கறையோரமாகவே ஈரோடு சென்று அங்கிருந்து கொடுமுடி வழியாக கரூரில் முடிவடைகிறது . 

ஆக கொங்கு நாடு முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பெருவழிகள் சென்றதால் வாணிகச் சிறப்பு மிக்கதாக விளங்கியது . இப்பெருவழிகள் வழியாக உள்நாட்டு அயல்நாட்டு வாணிகம் சிறப்புற விளங்கியமைக்கும் சான்றாகும் . கொங்கு பகுதிகளில் அகழ்வாய்வுகள் மூலம் பல வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன .

Pic credit google




Saturday, November 21, 2020

தமிழகக் கோயில்கள்

 1 . ஈரோடு பவானி

 2 . கத்தாங்கண்ணி , திருப்பூர்

 3 .கொங்கு தேச நந்திகள்

 4 .புல்வயல் தியாகராஜர் திருக்கோயில் புதுக்கோட்டை

 5 .கரூர் குடைவரை

6 .பூம்பாறை , போகர் நவபாஷணசிலை , கொடைக்கானல் 

7 . விஜயமங்கலம்  விஜயபுரிஅம்மன்

8 . உலகடம்  ஓலகடம் , அந்தியூர்

9 . கல்குதிரை  பாச்சல்  ராசிபுரம்

10 . கொடுமணல் கோவில்கள்

11 . தளவாய்ப்பாளையம் ,  காசி விஸ்வநாதர் திருக்கோயில்

12. Sri Agneeswarar Temple, Kalakkad

13. காசி விஸ்வநாத திருக்கோயில், தளவாபாளையம், திருப்பூர் மாவட்டம்

14 . குண்டான்குழி மகாதேவர் கோயில் மதகடிப்பட்டு , பாண்டிச்சேரி

மரபுச் சின்னங்கள்

 1. கொங்கு பெருவழிகள்

2. மாடு உரசும் கல்

3. படி கிணறு, ஊத்துக்குளி

4. Search of Hidden Heritage, Kodaikanal 

5. இராமநாதபுரம் சேதுபதிகள்

6. சித்திர சாவடி, மதுரை 

7. விவேகானந்தர் நினைவு மண்டபம், ராமநாதபுரம். 

8 . திருப்பூப் பலகை

9. சமத்தூர் ஜமீன்

10 மதுக்கரை மதில்கரை 

11. Dzogchen monastery, Udayarpalayam 

12. பரமத்தி கோட்டை 

13. டணாய்க்கன்கோட்டை  பவானி

14 . புரானா கிலா / PURANA QILA , டெல்லி

15 . Agrasen ki Baoli, Delhi

16 . Tomb of Safdurjung , Delhi

17 . Shyam Saran Negi

18 . Chandigarh , RockGarden , Nek Chand

19 . Hattu Madha , Narkonda ,  Himachal Pradesh

வரலாறு

 1 .  இஸ்லாமியர்களுக்கு இந்துக்களின் கொடை, ஈரோடு

2 .  ஈரோடும் காந்தியும் 

3 . கொங்கில் ஒரு கொற்றவை

4 . புரானா கிலா / PURANA QILA , டெல்லி

5 . Agrasen ki Baoli, Delhi

6 . Tomb of safdarjung , Delhi

7 . Shyam Saran Negi

8 . Chandigarh , RockGarden , Nek Chand

9 . Hattu Madha , Narkonda , Himachal Pradesh 

 


சுற்றுலா தலங்கள்

 1 . விவேகானந்தர் மண்டபம் , இராமநாதபுரம்

 2 . பாலி , இந்தோனேசியா Nusa dua

 3 . பாலி , இந்தோனேசியா puratirtaempul

 4 . ஜான் சல்லிவன் , கோத்தகிரி

சமணர் கோயில்கள்

 1 . பரஞ்சேர்வழி

 2 . சுல்தான்பத்தேரி

 3 . Doddathuppur , gundalpet ,karnataka

 4 .Chandraprabha temple , kelasur ,gundalpet ,karnataka

 5 . செந்நாக்கால்புதூர் , நாமக்கல்

6 . ஆறுநாட்டார்மலை , கரூர் 

7 . பூந்துறை ,  ஈரோடு மாவட்டம்  

8 . திருப்பருத்திக்குன்றம் , காஞ்சிபுரம்

9.   திருப்பருத்திக்குன்றம்  சுவர் ஓவியங்கள் , திருப்பருத்திக்குன்றம்

கொங்கு குல கோயில்கள்

 1 .  விஜயமங்கலம் விஜயபுரிஅம்மன்

 2 . அகத்தூர் அம்மன்  , காலிங்கராயர் கோயில்


கர்நாடக கோயில்கள்

 1 . Saumyakesava perumal temple , Nagamangala , Mandya district

2.  Sri lakshmi narasimhar temple , Marehalli

3 . Sriarkeshwarar temple , Hoonganoor , chamarajanagar

4 . Srivaratharajaperumal temple , Hoonganoor , chamarajanagar

5 . srilakshmivaratharaja samy temple , terakanambi , chamarajanagar

6 . Triyambakeshwarar temple ,chamarajanagar

7 . srivijayanarayana temple , gundalpet

8 . Arethippura ; Doddabetta , Chikkabetta  Mandyadistrict  , Karnataka

9 . Hoysala mallikarjuna temple , Mandya dist ,Karnataka  basaralu

10 . Bannur Mandhya dist Karnataka

பாண்டியர் கோயில்கள்

சோழர் கோயில்கள்

1 . Bannur Mandhya dist Karnataka

கோயில்கள்

1. தமிழக கோயில்கள் 

2. சோழர் கோயில்கள்

3. பாண்டியர் கோயில்கள்

4. கொங்கு குல கோயில்கள்

5. கர்நாடக கோயில்கள்


நடுகற்கள்

 1. கோத்தகிரி தேனாடு நடுகல்

 2 . ஸ்ரீ வீரபத்திரசாமி கோயில் , கலாலே ,கர்நாடகா

 3 . பழமங்களம் நடுகல்

 4 .ஈரோடு ஈஞ்சம்பள்ளி நடுகல்

 5 . தாளவாடி பன்றிகுத்திப்பட்டான்கல்

6 . மலையப்பாளையம் கவுந்தபாடி  ஈரோடு

7 . கர்நாடக நடுகற்கள்  

8. கோழி நடுகல், ஆவியூர் விழுப்புரம் மாவட்டம்

9. திருப்பூர் மாவட்டம் , செங்கப்பள்ளி

10. திருப்பூர் மாவட்டம் , அவினாசி பொங்குபாளையம்


பெருங்கற்கால சின்னங்கள்

 1 . கற்திட்டை  நம்பியூர்  மலையபாளையம்

 2 . கொடுமணல்

3 .  நெடுங்கல்/குத்துக்கல் , குண்டடம்

4 . கற்திட்டைகள்  , கங்கலேரி , கிருட்டிணகிரி

பாறை ஓவியங்கள்

1. கரிக்கையூர், கோத்தகிரி