Tuesday, September 3, 2019

சித்திரசாவடி, நரசிங்கபட்டி, மதுரை

மதுரை , நரசிங்கபட்டியில் உள்ளது "சித்திரசாவடி" என்னும் இடம் . "சாவடி" என்பது வழிப்போக்கர்களும், உள்ளூர் ஆண்களும்  தங்கவும், பேசவும் பயன்படுத்தப்படும் இடம் . சித்திரங்கள் நிறைந்த சாவடி என்பதால் "சித்திரசாவடி" என்று பெயர் ஏற்பட்டது  . இங்கு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமாயண ஓவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன .பெரும்பாலும் ஓவியங்கள் கோவில்களிலும் அரண்மனைகளிலும் தான் காணப்படுகின்றன . ஆனால் இங்கு சாவடியில்  ஓவியங்கள் காணப்படுவது வியப்பை அளிக்கின்றன .

மீனாட்சி அம்மன் கோயில் மற்றும்
அழகர்கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் காணப்படும்  ஓவியங்களை ஒத்த ஓவியங்கள் இங்கு உள்ளன. நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இவ்வோவியங்களின் வண்ணங்களும் காட்சிகளும் நம்மைக் கவர்கின்றன . 
சிவப்பு , பச்சை , நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களில் ஓவியங்கள் காணப்படுகின்றன .
இன்றைய அனிமேஷன் முறையில் தொடர்க்காட்சி  ஓவியங்களாக காணப்படுகிறது .நான்கு புறமும் உள்ள சுவர்களில் காணப்படும் இவ்வோவியங்கள் பார்வையாளர்களின் பார்வை தூரத்தில் உள்ளதே இதன் சிறப்பு ஆகும் . 

தென்னிந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக சுவர் ஓவியங்கள் உள்ளன . இந்த ஓவியங்கள் புராண கதைகளை மட்டும் விலக்காமல் அந்தந்த காலகட்டத்தின் வாழ்வியலையும் சமூகத்தையும் வெளிப்படுத்துகிறது . 
தற்போது இங்கு பாதி மேற்கூரைகள் பெயர்ந்து , ஓவியங்கள்யாவும்  அழியும் தருவாயில் உள்ளன .














No comments:

Post a Comment