Saturday, December 26, 2020

ஈரோடு ஈஞ்சம்பள்ளி நடுகல்

கொங்கு நாட்டின் ஒரு பிரிவான மேல் கரைப் பூந்துறை நாட்டை சேர்ந்த ஊர்களில் ஒன்று , ஈஞ்சம்பள்ளி . ஈரோடு - கொடுமுடி செல்லும் வழியில் சோளங்காபாளையம் அருகில் அமைந்துள்ளது இவ்வூர் . ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தின் கீழ் ஒரு நடுகல் உள்ளது . " வேடன் சாமி " என்ற பெயரில் மக்கள் இந்த வீரனை வணங்குகின்றனர் . 

                              இந்த நடுகல் வீரன் வில்லுடன் காட்சி தருகிறான் . அடுத்து அவனே  ஒருவருடன் சண்டையிடுவது போலும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது . ஊர்ப்பூசல், சிறு சண்டை காரணமாக இந்த வீரன் இறந்து பட்டிருக்கலாம்.  இந்த நடுகல் ஊர்ப்பொதுவில் உள்ளதால் பொது மக்களால் எடுக்கப்பட்ட நடுகல் ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன் (பிழையிருப்பின் அறிஞர்கள் திருத்தி உதவ வேண்டுகிறேன்). இதன்  15-16ம் நூற்றாண்டாக இருக்கலாம். இந்த நடுகல்லின்  அருகில் வேறு ஒரு நடுகல் கிடத்தப்பட்ட நிலையில் உள்ளது . இன்றுவரை இது நல்ல வாழிபாட்டுக்குறியதாக இருப்பது கொங்கு நாட்டில் நடுகல் வழிபாடு போற்றப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும் . 

                       மேலும் இவ்வூரில் சோழீஸ்வரர் மற்றும் பெருமாள் கோயில்கள் அருகருகே இருக்கின்றன.  இவற்றில் கல்வெட்டு எதுவும் காணப்படவில்லை . ஆனால் கோயில் பழமை மாறாமல் இருக்கிறது .  கோயிலின் உள்ளே தவ்வை தாய் சிற்பம் உள்ளது . அது மட்டும் அல்லாமல் கோயிலின் வெளியே பழமையான சிற்பங்கள் கிடத்தப்பட்டுள்ளது .






















No comments:

Post a Comment