Wednesday, September 4, 2019

பாலி , இந்தோனேசியா puratirtaempul , bali

இந்தோனேசியாவின் அழகிய தீவுகளில் ஒன்று பாலித் தீவு . இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில் இதுவும் ஒன்று . இத்தீவின் தலைநகர் தென்பசார் (denpasar ) . 
கடற்கரையையொட்டியே விமான நிலையம் அமைந்துள்ளதால் விமானம் தரையிறங்கும்போது கடலில் இறங்குவது போன்றே உள்ளது .
பாலி தீவில் இந்துக்களே அதிகம் வாழ்கின்றனர் . ராமாயணம் மகாபாரதம் சம்மந்தமான சிலைகள் தீவு முழுவதும் உள்ளது . விநாயகர் சிலைகளும் ஆங்காங்கே உள்ளன . "வாலி "என்பதே "பாலி" என்று மருவியதாக கூறப்படுகிறது . அனேகமாக எல்லா வீடுகளிலும் கோயில்கள் கட்டி வழிபாடு செய்கிறார்கள் . தினமும் மூன்று வேளையும் வழிபாடு நடக்கிறது . அவரவர் தகுதிக்கேற்ப சிறிதாகவோ பெரிதாகவோ கோயில் கட்டியிருக்கிறார்கள் . இதை பிரைவேட் கோயில் ( private temples ) என்கிறார்கள் .கோயில்களால் இத்தீவு நிரம்பி இருப்பதால் ஆயிரம் கோயில் தீவு என்று அழைக்கிறார்கள் .
Pura tirta empul என்னும் வரலாற்று சிறப்புமிக்க கோயில் இங்கு உள்ளது . (World heritage site ) கோயிலில் இயற்கையாக அமைந்த நீரூற்று இருக்கிறது. அதில் வரும் நீரில் தீர்த்த நீராடுகிறார்கள் . புனித நீராடலால் உடல் ஆரோக்கியமும் செல்வமும் கிட்டும் என்று நம்பப்படுகிறது . இங்குள்ள கோயில்களின் உள்ளே செல்ல ஆண் பெண் இருவருமே வேஷ்டி அணிந்து தான் செல்ல வேண்டும் . கோயிலுக்கு வெளியே வேட்டியை இலவசமாகத் தருகிறார்கள் . சுற்றுலா பயணிகளை ஒரு எல்லை வரை மட்டுமே




















No comments:

Post a Comment