Monday, March 1, 2021

கற்திட்டைகள் , கங்கலேரி , கிருட்டிணகிரி

 

கற்திட்டைகள் என்பது இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எழும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதன் மேல் சதுரவடிவில் நான்கு பக்கம் சுவர்களுடன் மேலே ஒரு பலகை கல்லை வைத்து மூடியது போன்ற ஒரு அமைப்பை கல்திட்டைகள் என்று அழைக்கப்படுகிறது . நான்கு பக்க சுவர்களில் ஒரு பக்கம் மட்டும் வட்ட வடிவில் ஒரு ஓட்டை அமைப்புடன் காணப்படும் . இந்த அமைப்பை இடுத்துளை என்பர்.


  கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி என்னும் இடத்தில்  மிகவும்  பிரம்மாண்டமான மற்றும் பழமையான கற்திட்டைகள் இடுதுளையுடன் காணப்படுகின்றன. இதன் மேற்பலகைக் கற்கள் சுமார் ஐந்து டன்னுக்கும் மேல் எடையுள்ளவை. வசதிவாய்ப்புகள் எதுவும் இல்லாத காலகட்டத்தில் இவற்றை எவ்வாறு மேலே தூக்கி தூக்கிவைத்திருப்பர் என்பது வியப்பே.


இங்கு 400க்கும் மேற்பட்ட கற்திட்டைகளுடன் கூடிய இடுகாடு இருந்து இருக்கிறது,  ஆனால் தற்போது அவை அனைத்தும் உடைக்கப்பட்டு விட்டன. தற்போது உள்ள இரண்டு கற்திட்டைகளில் ஒரு கற்திட்டை மட்டுமே நல்ல நிலையில் உள்ளது . மற்றொன்று சிதைக்கப்பட்டு விட்டது.


கற்கால நாகரீகத்தைப் பறைசாற்றும் இந்த சின்னங்களை அரசும் மக்களும் போற்றி பாதுகாக்க வேண்டும்.






No comments:

Post a Comment