Thursday, October 10, 2019

ஸ்ரீ லக்ஷ்மி வரதராஜ சுவாமி கோயில், கர்நாடகா

சாம்ராஜ் நகரிலிருந்து  30 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது ஸ்ரீ லக்ஷ்மி வரதராஜ சுவாமி கோயில் . கடம்பர் ,சோழர், ஹொய்சாலர் , விஜயநகர , மைசூர் அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்ட நகரமாக Terakanambi நகரம் இருந்தது . இந்த ஊரில்தான் மைசூர் அரசரான ஸ்ரீ ரண தீரா காண்ட்ரவா தன் சிறு வயதில் வாழ்ந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் இப்பேரரசின் எல்லை மதுரை வரை நீண்டிருந்தது. இங்கு 12 கோயில்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது 9 கோயில்களே மீதம் உள்ளன. பெருமாள் தனநாயக்காவின் மகனான மாதண்ட நாயகரால் இக்கோயில் கட்டப்பட்டது. பின் விஜயநகர பேரரசால் விரிவு படுத்தப்பட்டது . தெற்கு பகுதியை கிருஷ்ணராஜ வாண்டயர் விரிவுபடுத்தினார்.  2000ம் ஆண்டு இக்கோயில் புனரமைக்கப்பட்டது.






No comments:

Post a Comment