Friday, April 21, 2023

JANTAR MANDIR , DELHI

 Jantarmandir

இந்தியாவில் உள்ள பல வரலாற்று சின்னங்களில் இது ஒரு விந்தையான அதிசய கட்டிடம் . நமது தலைநகரான புது டெல்லியில் அமைந்திருக்கும் ஜன்தர்மந்தர் எனப்படும் இக்கட்டிடம் நம் முன்னோர்களின் வானிலை அறிவை நாம் அறிந்து கொள்ள சான்றாக விளங்குகிறது. கருவிகள் இல்லாமல் கட்டிடத்தையே கருவியாய் அமைத்து வானிலை ஆராய்ச்சிக்காக நமது அறிஞர்களால் உருவாக்கப்பட்டது தான் நாம் காணும் ஜன்தர்ந்தர் .

முகலாயப் பேரரசின் வழிவந்த முகமது ஷா மற்ற இஸ்லாமிய மன்னர்கள் போலவே ஜட்ஜ் ZIJ என்னும் இஸ்லாமிய வானிலை நாட்காட்டியை பின்பற்றினார் . Zij என்பது இஸ்லாமிய வானியல் புத்தகமாகும், இது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைகளின் வானியல் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் வானிலை புத்தகம் ஆகும் . ஜெய்பூரைச் சேர்ந்த மகாராஜா இரண்டாம் ஜெய்சிங் 1699-1743 ( ஜெய்ப்பூர் நகரை உருவாக்கியவர் ) என்பவர் போர்த்திறமையில் மட்டும் அல்லாமல் வானிலையிலும் மற்றும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார் . அவர் இந்த ஜிஜ் நாட்காட்டி வானிலையோடு பொருந்தவில்லை என்பதை கணக்கீடு செய்து அதனை மன்னருக்கு தெரியப்படுத்தினார் . வானிலை கணக்கீட்டை மறு ஆய்வு செய்ய ஆர்வம் காட்டினார் . முகமது ஷாவின் அனுமதியோடு ராஜா ஜெய்சிங் , ஜன்தா மந்தர் என்னும் கட்டிடத்தை வானிலை முறைப்படி முதலில் டெல்லியில் அமைய செய்தார் .
 
இந்தியாவின் முதல் ஜன்தர் மந்தர் டெல்லியில் கட்டப்பட்டது . ஜெய்ப்பூர் , உஜ்ஜைன் , வாரணாசி , மற்றும் மதுராவிலும் அமைக்கப்பட்டன . 1724 - 1734 ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட இக்கட்டிடத்தில் நான்கு முக்கிய கட்டிடங்கள் உள்ளன . அவை
1) Samrat yantra
2) Mishra yantra
3) Jaiprakash yantra
4 )Ram yantra

1 ) Samrat yantra
இது ஒரு முக்கியமான கருவி சூரியனின் நிழல் விழுவதைக் கொண்டு நேரத்தை கண்டறிய முடியும் கருவி . இதன் உயரம் சுமார் 20.43m .பூமியின் பாதைக்கு இணையாக சுவரை சாய்த்து இரண்டு அரை வட்டமாக கட்டப்பட்டுள்ளது .

2) Mishra yantra
இது மட்டும் ஜெய்சிங் ராஜாவின் மகன் மாதோ சிங் கட்டியதாக சொல்லப்படுகிறது . வருடத்தின் நீண்ட நாள் மற்றும் குறுகிய நாட்களை கணக்கிடவும் உலகின் பல்வேறு நகரங்களின் நேரத்தையும் அறிய முடியும் .


3) Jaiprakash yantra
ராஜா ஜெய் சிங் (light of jai ) பெயரையே இதற்கு சூட்டப்பட்டுள்ளது . இந்த யந்திராவைக் கொண்டு கிரகணம் வருவதை அறிந்து கொள்ளலாம் . இரவு பகல் இரு வேளைகளிலும் இதை பயன்படுத்தலாம் . இதன் வடிவம் அரைக்கோன வடிவமாகும் . குழியான மேற்பரப்புகள் அவற்றின்மீது சில அடையாளங்களுடன் காணப்படுகிறது . இதன் வடிவம் நட்சத்திரம் மற்றும் கோள்களையும் குறிக்கிறது .

4 )Ram yantra
மஹாராஜா ஜெய் சிங்கின் தாத்தா ராம் சிங்கின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது . உருளை வடிவமாக காணப்படும் இதை கொண்டு சூரிய நிழலை வைத்துக் கோள்கள் மற்றும நட்சத்திரங்களின் இருப்பிடத்தை அறிய முடிகிறது .


வானிலை ரீதியாக சரியான நாட்காட்டியை உருவாக்க முயன்ற மன்னரால் உருவாக்க பட்ட இக்கட்டிடம் போன்று உலகில் வேறு நாடுகளில் எங்கும் இல்லை . இவை ராஜா ஜெய் சிங் காலத்தில் அதாவது 18ம் நூற்றாண்டில் சிறந்து விளங்கி பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அதன் பயன்பாட்டை இழந்தது . தற்போது இவற்றை சுற்றி பல உயரமான கட்டிடங்கள் உருவாக்கியதால் இவை சரியான கணக்கீடுகளை காட்டுமா என்பது ஐயமே . இது அறிவியல் சார்ந்த அறிவு பெற்றவர்கள் மிகவும் விரும்பும் இடமாகும் .












4 comments: