Tuesday, October 15, 2019

சமணர் படுக்கைகள், செந்நாக்காடு/ செந்நாக்கல்புதூர், நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம் , செந்நாக்கல்பாளையத்திற்கு அருகே  செந்நாக்குன்று அல்லது செந்நாக்கரடு என்னும் ஊர் .இவ்வூர் தற்போது செந்நாக்கல்புதூர் என்று அழைக்கப்படுகிறது .இங்கு உள்ள சிறு குன்றில்  சிறிய குகை உள்ளது . அந்த குகைத்தளத்தில் நான்கு கல் படுக்கைகள் உள்ளன . முதல் படுக்கையில் தலையணை போல உள்ள பகுதியில் அழகிய மலர் பொறிக்கப்பட்டுள்ளது .இரண்டாவது படுக்கையில்  அதே தலையணை போன்ற பகுதியில் சுவஸ்திக் சின்னமும், நான்காவது படுக்கையில் ஸ்ரீவத்ஸம் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது . இது சுமார் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.