ஈரோடும் காந்தியும்
காந்தியடிகள் முதல் முறையாக 1920ம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று திருச்சியில் இருந்து கள்ளிக்கோட்டை செல்லும் வழியில் ஈரோடுக்கு வந்தார் . இரண்டாவது முறையாக 25.9.1921 வந்தார். அன்று ஈ . வெ. ரா. பெரியார் இல்லத்தில் தங்கினார் . அதி காலை 3.25 மணி அளவில் ராட்டையில் நூல் நூற்பது எப்படி என்று எல்லோருக்கும் பயிற்சி கொடுத்ததாக தகவல் உள்ளது .
அதற்கு அடுத்து 1925 ,1934 ம் ஆண்டு என இரு முறை ஈரோடு வந்துள்ளார்.
முதல் மூன்று வருகைகளிலும் காந்தியை வரவேற்ற பெரியார் 1934 ம் ஆண்டு காந்திஜி ஈரோடு வந்த போது சுய மரியாதை போராட்டத்தின் காரணமாக கருப்புக்கொடி காட்டினார்.
ஈரோடு பொதுமக்கள் ஐந்து இடங்களில் காந்திஜிக்கு சிலை வைத்து மரியாதை செய்து உள்ளனர். இதில் வ.உ. சி பூங்காவில் உள்ள இரண்டு சிலைகள் காந்தியடிகள் வாழ்நாளிலேயே வைக்கப்பட்டன .
ஈரோடு அருகே உள்ள செந்தாம்பாளையம் கிராமத்தில் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு கோயில் கட்டி மகாத்மா காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூரிபாய் ஆகியோரது சிலை வைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment