Thursday, February 11, 2021

கொடுமணல் கோவில்கள்

 வரலாற்று சிறப்புமிக்க கொடுமண லின் தொன்மை மற்றும் வணிக சிறப்புகளை காண்பதற்கு முன் கொடுமணலில் உள்ள கோயில்கள் மற்றும் அதன் சிறப்புகளைக் காண்போம் . 

        ஒரு பழைய பாடல் ஒன்று கொடுமணலை " ஆலயஞ்செறி கொடுமணல்" என்று கூறுகிறது . நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் கொடுமணலுக்கு உரிய கோயில்கள் மிகுதியாக உள்ளன . 

சிவன் கோயில் :

      நொய்யல் அணையின் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உள்ள சிவன் கோயில் பற்றி காண்போம். 

வீரசோழபுர நாடு என்ற பெயருக்கு ஏற்ப இங்கு உள்ள சிவனுக்கு சோழீஸ்வரர் என்று பெயர் . மக்கள் அக்னீஸ்வரர் என்று அழைக்கின்றனர் . இக்கோயிலுக்கு கொங்கு சோழர்கள் திருப்பணி செய்துள்ளனர் . இக்கோயிலில் கல்வெட்டுகள் சிதைந்து விட்டன . இந்த அக்னீஸ்வரர் தற்போது தங்கம்மான் கோயில் அருகே புதிய திருக்கோயிலில் வீற்றிருக்கிறார் . 


பெருமாள் கோயில்:

      பொதுவாக கொங்கு நாட்டில் பெருமாள் கோயில்களை " மேலைத் திருப்பதி"  என அழைக்கப்பெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றன . இங்குள்ள பெருமாளுக்கு வீர நாராயண பெருமாள் மற்றும் அல்லாளப் பெருமாள் என்றும் பெயர்கள் உள்ளன . இக்கோயிலும் நொய்யல் அணையில் மூழ்கி உள்ள காரணத்தால் இங்கிருந்த பெருமாள் உள்ளிட்ட சிலைகளை தற்போது ஊருக்குள் வைத்து வழிபடுகிறார்கள் . 


மதுரகாளியம்மன் :

                   நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்து உள்ள இக்கோயிலும் அணையில் மூழ்கி உள்ளது . இங்கிருந்த மதுரகாளியம்மன் சிலை தற்போது கொடுமணலில் அத்தனூரம்மன் கோயில் வளாகத்தில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது . இந்த அம்மன் சிலை மிக அழகாக அமைந்துள்ளது . 


அத்தனூரம்மன் :

            இக்கோயில் நொய்யல் அருகில் கொடுமணலில் கிழக்கே அமைந்துள்ள தொன்மையான கோயில் ஆகும் . 


தங்கம்மன் கோயில்:

        நொய்யல் ஆற்றின் தென்கரையில் ஆற்றின் அருகே அமைந்து உள்ளது இக்கோயில் . கொடுமணலின் பெருமைக்கும் வரலாற்று சிறப்புக்கும் தங்கம்மன் தான் மூலகாரணமாக விளங்குவதாக நம்பப்படுகிறது.













No comments:

Post a Comment