Tuesday, September 3, 2019

மதுக்கரை மதில்கரை

#மதுக்கரை #மதில்கரை #மூவேந்தர்எல்லை

சீனப்பெருஞ்சுவர் தெரியும் "சேரசோழபாண்டிய சுவர்" தெரியுமா?

கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 20km தொலைவில் உள்ளது மாயனூர் . "மையம்" (centre point) அதாவது மைய ஊர் என்ற சொல்லே மருவி மாயனூர் ஆனதாக சொல்லப்படுகிறது . இந்த இடமே சேர , சோழ , பாண்டிய நாடுகள் சந்திக்கும் மையம்  ( centre point) ஆகும் .

காவிக்கரையில் அமைந்த இவ்வூரில்  "செல்லாண்டியம்மன் கோயில்" என்ற பழைமையான கிராம தெய்வ  கோயில் உள்ளது . இக்கோயில் சேர சோழ பாண்டிநாடு ஆகிய மூன்று நாடுகள் கூடும் இடத்தில் உள்ளது . சோழனுக்கு கிழக்கு , பாண்டியனுக்கு தெற்கு , சேரனுக்கு மேற்கு நடுவில் செல்லாண்டி அம்மன் என்று கூறப்படுகிறது . இக்கோயில் மூவருக்கும் பொதுவானது . இக்கோயில் அருகே சோழ விநாயகர் கோயில் , பாண்டிய விநாயகர் கோவிலகள் உள்ளன . இந்த இடத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் அவ்வப்போது அல்லது தங்கள் தேவைக்கு கூடி பிரச்சனைகளை தீர்த்து கொள்வது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது .

மூன்று நாடுகளின் எல்லை என்பதால் எல்லைகளை  வரையறுக்க இங்கு ஒரு  மதில் அமைத்தனர் . இந்த மதில்கரை சுமார் 5.5 அடி அகலம் உடையதாகவும்   சுமார் 25 km வரை செல்கிறது . இந்த மதில் மதுரை வரை செல்வதாக சொல்லப்படுகிறது . இதன் பழமை தெரியாமல் இந்த  மதில்கரை மேல் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு தற்போதைய அரசு தார்சாலை அமைத்துள்ளது. பெரும்பாலான இடங்களில் இதனை சிதைத்தும் ஆக்கிரமித்தும் விட்டனர், ஓரிரு இடங்களில் மட்டும் இந்த கரை அடையாளம் தெரிகிறது.

 இதனை குறிக்கும் விதமாக நாட்டுப்புற பாடல் ஒன்று
 "மண்ணைப் பிரித்த மதுக்கரை செல்லாயி" என்று கூறுகிறது .
செல்லாண்டி அம்மன் கோயில் கொங்கு நாட்டில் பல இடங்களில் உள்ளது . இக்கோயிலுக்கு வந்து ஒரு பிடிமண் எடுத்து சென்றே புதியகோயில் கட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆகவே இந்த செல்லாண்டியே கொங்கின் மிகப்பழமையான செல்லாண்டியம்மனாக கருத முடிகிறது.

கொங்கு எல்லைகளை கூறும் போது  இக்கரை கிழக்கு எல்லையாக குறிப்பிடுகிறது .

 சோழன் பூர்வ பட்டயம்
"வடக்கெல்லை பாலமலை வைகாவூர்  தெற்கு
குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று - கடற்பால்
கோட்டைக் கரையளவும் கொங்குநாட்டு எல்லையென
நாட்டிவைத்தார் நல்லோர்களே " என்று இந்த மதில் கரையைக் குறிப்பிடுகிறது.

இந்த மதில்கரை என்ற பெயர் மருவி தற்போது அந்த ஊர் மதுக்கரை ஆனது .

#konguhistory 33












No comments:

Post a Comment