Wednesday, September 4, 2019

பாலி , இந்தோனேசியா puratirtaempul , bali

இந்தோனேசியாவின் அழகிய தீவுகளில் ஒன்று பாலித் தீவு . இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில் இதுவும் ஒன்று . இத்தீவின் தலைநகர் தென்பசார் (denpasar ) . 
கடற்கரையையொட்டியே விமான நிலையம் அமைந்துள்ளதால் விமானம் தரையிறங்கும்போது கடலில் இறங்குவது போன்றே உள்ளது .
பாலி தீவில் இந்துக்களே அதிகம் வாழ்கின்றனர் . ராமாயணம் மகாபாரதம் சம்மந்தமான சிலைகள் தீவு முழுவதும் உள்ளது . விநாயகர் சிலைகளும் ஆங்காங்கே உள்ளன . "வாலி "என்பதே "பாலி" என்று மருவியதாக கூறப்படுகிறது . அனேகமாக எல்லா வீடுகளிலும் கோயில்கள் கட்டி வழிபாடு செய்கிறார்கள் . தினமும் மூன்று வேளையும் வழிபாடு நடக்கிறது . அவரவர் தகுதிக்கேற்ப சிறிதாகவோ பெரிதாகவோ கோயில் கட்டியிருக்கிறார்கள் . இதை பிரைவேட் கோயில் ( private temples ) என்கிறார்கள் .கோயில்களால் இத்தீவு நிரம்பி இருப்பதால் ஆயிரம் கோயில் தீவு என்று அழைக்கிறார்கள் .
Pura tirta empul என்னும் வரலாற்று சிறப்புமிக்க கோயில் இங்கு உள்ளது . (World heritage site ) கோயிலில் இயற்கையாக அமைந்த நீரூற்று இருக்கிறது. அதில் வரும் நீரில் தீர்த்த நீராடுகிறார்கள் . புனித நீராடலால் உடல் ஆரோக்கியமும் செல்வமும் கிட்டும் என்று நம்பப்படுகிறது . இங்குள்ள கோயில்களின் உள்ளே செல்ல ஆண் பெண் இருவருமே வேஷ்டி அணிந்து தான் செல்ல வேண்டும் . கோயிலுக்கு வெளியே வேட்டியை இலவசமாகத் தருகிறார்கள் . சுற்றுலா பயணிகளை ஒரு எல்லை வரை மட்டுமே




















பாலி , இந்தோனேசியா Nusa dua Bali Indonesia

பாலி , இந்தோனேஷியாவின் அழகிய தீவு . இங்கு முஸ்லிம்களும் இந்துக்களும் அதிகம் வாழ்கிறார்கள் . அவர்களுக்கு அடுத்து கிறிஸ்தவர்களும், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்கிறார்கள் . Nusa dua என்னும் இடத்தில் ஜெகநாதர் கோயில் ,  கிறிஸ்துவ தேவாலயம் , பள்ளிவாசல் , புத்தர் கோயில் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் அடுத்தடுத்து தடுப்பு சுவர் கூட இல்லாமல் உள்ளது  . அனைத்து மக்களும் ஒற்றுமையாக வந்து வழிபாடு செய்கிறார்கள்.

மர வேலைப்பாடுகளால் ஆன சிலைகளும்  கண்ணாடி உலோகத்தாலான பொருட்கள் ,வெள்ளி என ஷாப்பிங் செய்ய பாலித் தீவில் நீறைய இருக்கிறது . 

அடுத்து ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அங்கு நிறைய மக்களுக்கு டீ என்றால் என்னவென்றே தெரியவில்லை . வாசனையான காபித்தூள் விற்கிறார்கள் , வாங்கச் சென்றால் சைவ காப்பியா? அசைவ காப்பியா?  என்று கேட்கிறார்கள் .  அசைவ காப்பி என்றால் மங்கூஸ் என்ற விலங்கிற்கு காபி கொட்டையை உணவாகக்  கொடுத்து , அது உண்டு கழிக்கும் மலத்தில் இருந்து எடுத்த காபி கொட்டையை அரைத்து கொடுப்பதாம் . 

 அங்குள்ள சமையல் சிலிண்டர்கள் சுமார் இரண்டு கிலோ மட்டுமே உள்ளன .  அதுவும் நம் ஊரில் ஊரில் தண்ணீர் விற்பது போல பெட்டிக் கடையில் கூட கிடைக்கிறது .  அங்கு பெட்ரோல் விலை வெறும் 30 ரூபா மட்டுமே . அதனால் எந்த டிரைவர்களும் வண்டி என்ஜினை நிறுத்துவதில்லை , எப்போதும் ஏசி போட்டு அமர்ந்திருப்பதை  பார்க்கவே பொறாமையாக உள்ளது .

 அடுத்து அங்கு உள்ள ஹோட்டல்கள்  எங்கு சென்றாலும் குடிதண்ணீர் இலவசமாக தருவதில்லை . Buffet lunch (1300 /person ) சாப்பிட்டாலும் தண்ணீருக்கு தனியாக காசு கொடுக்க வேண்டியுள்ளது . தண்ணீருக்கு அடுத்து மிளகு தான் அங்கு டிமாண்ட் . ஹோட்டல் சென்று மிளகுப்பொடி கேட்டால் ஒரு சிறிய பாக்கெட் மட்டுமே தருகிறார்கள் . அதுவும் காரமில்லாத பொடி . நம் நாட்டின் மீது  இந்த மிளகுக்காகத்தானே நிறைய படையெடுப்பு நடந்தது . 

 தண்ணீர் விளையாட்டுகள் மசாஜ் சென்டர்கள் என சுற்றுலா செல்ல அமைதியான அழகான தீவு , பாலி.












Tuesday, September 3, 2019

பாறைஓவியம் ,கரிக்கையூர், கோத்தகிரி

தொல்பழங்கால மக்களின் வாழ்விடங்களில் காணப்படும் தொன்மையான அடையாளங்களாக பாறை ஓவியங்களை கூறலாம்.  இவை தனிமனிதனின் எச்சங்களாக இல்லாமல் ஓர் குழு அல்லது இனத்தின் பண்பாடு மற்றும் வாழ்க்கையை குறிப்பது போலவே அமைந்துள்ளது . தமிழ்நாட்டில் உள்ள ஓவியங்கள் பெரும்பாலும் மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் , வேட்டையாடுதல் , கால்நடை வளர்த்தல் போன்றவற்றை சார்ந்தே உள்ளன . பாறை ஓவியங்கள் பொதுவாக வெள்ளை, சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் காணப்பட்டாலும் சிவப்பு , வெள்ளை  நிறங்களிலேயே பெரும்பாலான ஓவியங்கள் உள்ளன . 

 கோத்தகிரி அடுத்து உள்ள சோலூர் மட்டம் அருகில் உள்ள கரிக்ககையூரில் தொல்பழங்கால ஓவியங்கள் உள்ளன . இந்தியாவில் உள்ள பெரிய பாறை ஓவியத் தொகுப்புகளில் இதுவும் ஒன்று . இங்கு ஒரு பெரிய குகை அமைப்பில் உள்ள பாறையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன . இங்கிருந்து பார்த்தால் சுமார் 10 - 20 கிலோமீட்டர் தூரத்தை பார்க்க முடிகிறது . இங்கு இருந்து பார்த்தால் பவானி சாகர் அணையின் நீர் தெரிகிறது .  இங்கு  200க்கு மேற்பட்ட வெவ்வேறு காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன . இவை செந்நிறம் மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகிறது . இவை சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது .

 இங்கு பல விலங்குகளின் ஓவியங்கள் , போர் காட்சி , நடனக்காட்சி , மனித உறவுகளை மையப்படுத்திய ஓவியங்கள் என பல ஓவியங்கள் உள்ளன . சில விலங்குகளை பக்கவாட்டிலும்,  சில விலங்குகளை நேர்கோட்டில் வரைந்துள்ளனர் . கற்கால மனிதனின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் இவ்வோவியங்கள் மூலம் நாம் அறிய  முடிகிறது .












சமணர் கோயில், சுல்தான்பத்தேரி, sultanbattery, jaintemples

சுல்தான் பத்தேரி , வயநாடு பகுதியில் உள்ள கல்பேட்டாவிலிருந்து 24 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ளது . கல்வெட்டுகளில்  சுல்தான் பத்தேரி  " கணபதி வட்டம்"என அழைக்கப்படுகிறது.  திப்பு சுல்தான் இந்த ஊரை கைப்பற்றி இப்பகுதியை ஆயுதக் கிடங்காகவும் வெடிமருந்துகளை சேமிப்பதற்காகவும் பயன்படுத்தினார் . அதனால் இவ்வூருக்கு ஆங்கிலேயர் காலத்தில் "சுல்தான் பத்தேரி" (sultan battery) என்று பெயர் மருவியதாக கூறப்படுகிறது .

 பொதுவாக கேரளாவில் மிகக் குறைவான சமணக் கோயில்களே உள்ளன . அவற்றுள் சுல்தான் பத்தேரி ஊரில் அமைந்துள்ள பழமையான சமணக்கோயில் கிபி 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது  .
அதைச் சுற்றியும் 12 பாரம்பரிய சமண வீதிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது .
கோயிலின் கட்டிடக்கலை  விஜயநகர் கட்டடக்கலை பாணியில் உள்ளது . கோயிலில் சிலைகள் எதுவும் இல்லை.  இங்கு உள்ள தூண்களில் சர்பபந்தா , தீர்த்தங்கரர் உருவங்கள் உள்ளன. இது தற்போது மத்திய தொல்பொருள்   துறையின் கீழ் உள்ளது .