Tuesday, September 3, 2019

சமணர் கோயில், சுல்தான்பத்தேரி, sultanbattery, jaintemples

சுல்தான் பத்தேரி , வயநாடு பகுதியில் உள்ள கல்பேட்டாவிலிருந்து 24 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ளது . கல்வெட்டுகளில்  சுல்தான் பத்தேரி  " கணபதி வட்டம்"என அழைக்கப்படுகிறது.  திப்பு சுல்தான் இந்த ஊரை கைப்பற்றி இப்பகுதியை ஆயுதக் கிடங்காகவும் வெடிமருந்துகளை சேமிப்பதற்காகவும் பயன்படுத்தினார் . அதனால் இவ்வூருக்கு ஆங்கிலேயர் காலத்தில் "சுல்தான் பத்தேரி" (sultan battery) என்று பெயர் மருவியதாக கூறப்படுகிறது .

 பொதுவாக கேரளாவில் மிகக் குறைவான சமணக் கோயில்களே உள்ளன . அவற்றுள் சுல்தான் பத்தேரி ஊரில் அமைந்துள்ள பழமையான சமணக்கோயில் கிபி 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது  .
அதைச் சுற்றியும் 12 பாரம்பரிய சமண வீதிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது .
கோயிலின் கட்டிடக்கலை  விஜயநகர் கட்டடக்கலை பாணியில் உள்ளது . கோயிலில் சிலைகள் எதுவும் இல்லை.  இங்கு உள்ள தூண்களில் சர்பபந்தா , தீர்த்தங்கரர் உருவங்கள் உள்ளன. இது தற்போது மத்திய தொல்பொருள்   துறையின் கீழ் உள்ளது .







No comments:

Post a Comment