Sunday, December 6, 2020

ஜான் சல்லிவன் , கோத்தகிரி

 நீலகிரியில் உள்ள கோத்தகிரி "இந்தியாவின் சுவிஸர்லாந்த்" என்று அழைக்கப்படுகிறது . இங்குள்ள தட்பவெட்ப நிலையும் சுவிஸர்லாந்தின் தட்பவெட்ப நிலையும் ஒரே மாதிரி இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது . உலக சுற்றுலா வரைபடத்தில் நீலகிரி மாவட்டம் இடம் பெற காரணமாக இருந்தவர் ஜான் சல்லிவன் . இவரே நீலகிரியின் தந்தை என  போற்றப்படுகிறார் .

1819 ஆம் ஆண்டு கோத்தகிரி , கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது . ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை கலெக்டராக இருந்தவர் ஜான் சல்லிவன் .15 ஜூன் 1788 ஆண்டு லண்டனில் பிறந்த இவர், கிழக்கிந்திய கம்பெனியின் ரைட்டராக சேர்ந்து பின் 1816ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டர்ராக பணியாற்றினார் .  பின் 1815 - 1930 வரை கோவை கலெக்டராக பணியாற்றினார் . இவர் காலத்தில் நீலகிரிக்கு வர போதிய வசதி இல்லாத காரணத்தாலும் , அடர்ந்த வனப்பகுதியாளும் இங்கு வாழ்ந்த மக்களுக்கு வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருந்தனர் . இந்த பகுதியின் இயற்கை சுற்றுச்சூழல் ஜான் சல்லிவன் அவர்களை மிகவும் கவர்ந்ததால்  திம்பட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கன்னேரிமுக்கு என்னுமிடத்தில் கேம்ப் ஆபீஸ் அமைத்தார் . இதுவே உதகையின் முதல் அரசு அலுவலகம். இதற்குப் பின்னரே உதகையில் உள்ள ஸ்டோன் ஹவுஸ் கட்டப்பட்டது.   ஊட்டியுள்ள மிகப்பெரிய ஏரியும் இவரால் உருவாக்கப்பட்டது . மேலும் மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார்.

இவரின் வருகைக்குப் பிறகே ஊட்டியில் தேநீர்  மற்றும் கேரட் , பீட்ரூட் ஆகியன பயிர் செய்யப்பட்டன .  கோத்தகிரியின்  பொருளாதார வளர்ச்சிக்கு இவரே காரணம் . நீலகிரி வரலாற்றில் ஜான் சல்லிவனுக்கு முக்கிய இடம் உண்டு .








No comments:

Post a Comment