Friday, September 15, 2023

Hattu Madha , Narkonda , himachal Pradesh

Hattu Madha , Narkonda , Himachal Pradesh

இந்தியாவின் மலை மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா , ஆங்கிலேயர் ஆட்சியின்போது நம் நாட்டின் கோடைகால தலைநகராக விளங்கியது . அப்போதுமட்டுமல்லால் தற்போதும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தளமாக உள்ளதால் நெரிசலான இடமாக மாறி உள்ளது . 

சிம்லாவில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள  ஒரு சிறிய நகரம் நார்கண்டா . இது இந்தியா - திபெத் சாலையில் அமைந்துள்ள அமைதியான , அதிக சுற்றுலா பயணிகள் பயணிக்காத இடமாக உள்ளது .  நார்கண்டாவில்  இருந்து 8km தொலைவில் உள்ளது ஹட்டு மாதா கோயில் . இக்கோயிலை பற்றி காண்போம் .

சிம்லாவில் உள்ள உயரமான சிகரங்களில் ஒன்றான ஹட்டு சிகரத்தில் ஸ்ரீ ஹட்டு மாதா என்னும் காளி கோயில் அமைந்துள்ளது .  ராவணனின் மனைவியாக மண்டோதரி தான் ஹட்டு மாதா  என்றும் நம்பப்படுகிறது . 

 இக்கோயில் காண்பதற்கு சீன கோயில் போல காட்சியளிக்கிறது . கண்ணாடி மற்றும் கோயிலை சுற்றி முழுவதும் மரத்தால் கட்டப்பட்டுள்ளது . இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் நம் இதிகாசங்களான  இராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகளை சித்தரிக்கின்றன . இக்கோயிலை சுற்றி உள்ள மலைகளில் ஆப்பிள் மரங்களால் சூழப்பட்டுள்ளது . சூரிய அஸ்திமானத்தை காண்பதற்கு ஏற்ற இடமாக இத்தலம் விளங்குகிறது .













Chandigarh , Rock Garden , Nek chand

 சண்டிகர் :

பஞ்சாப் , ஹரியானா என இரு மாநிலங்களின் தலைநகர் சண்டிகர் அது மட்டுமல்லாமல் , இந்தத் தலைநகரே ஒரு யூனியன் பிரதேசமாகவும் விளங்குகிறது .  இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில் ஒன்றாக விளங்கும் சண்டிகர் , ஜவஹர்லால் நேருவின் "கனவு நகரம் " என்றும் போற்றப்படுகிறது . 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம்  பெற்ற பின் உருவாக்கப்பட்ட நகரமாகும் (planned city ) . இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பஞ்சாப்பின் அப்போதைய தலைநகரான லாகூர் பாகிஸ்தான் வசம் சென்றது . இந்தியா வசம் இருந்த பஞ்சாபின் கிழக்குப் பகுதிகளுக்கு தலைநகருக்கான தேவை ஏற்பட்டது . மார்ச் 1948 இல் இந்திய அரசுடன் கலந்த ஆலோசித்த பஞ்சாப் அரசு , புதிய தலைநகருக்கான இடமாக அம்பாலா மாவட்டத்தில் உள்ள சிவாலிக் மலைகளின் அடிவாரத்தில் உள்ள நிலப்பகுதியை தேர்ந்தெடுத்தது .  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவகர்லால் நேரு இத்திட்டத்தை ஆர்வத்துடன் ஆதரித்து அதனை செயல்படுத்துவதில் தொடர்ந்து அக்கறை காட்டினார் . ஏப்ரல் 2 , 1952 இல் எதிர்கால தேசத்தின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இந்தப் புதிய தலைநகர் இருக்கட்டும் என அறிவித்தார் . 

புதிய தலைநகருக்கு " சண்டிகர் " என பெயர் சூட்டப்பட்டது . இது பஞ்சாபியர்களின் வீர உணர்வின் அடையாளமாகவும் , சண்டி தேவியின் பெயருடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது . புதிய தலைநகரை உருவாக்க இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவிஸ் நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை கலைஞர் லீ கார்பூசியர் (Le Corbusier ) . இவரின் யோசனையால்  தான் புதிதாக உருவாக்கப்பட்ட சண்டிகர் நகரம் நன்கு திட்டமிடப்பட்டு , வரையறுத்தப்பட்ட பகுதிகளாகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது . நகரம் முழுவதும் பல செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது . இரு மாநிலங்களின் தலைநகரமாக இருப்பதால் இரு மாநிலங்களின் நிர்வாக தலைமையகம் இங்குதான் அமைந்துள்ளது . எனவே இங்கு அதற்கு தேவையான அகலமான சாலைகள் , திட்டமிடப்பட்ட கட்டிடங்கள் , நீர் நிலையங்கள் , மருத்துவம் , தபால் அலுவலகம் , சந்தை போன்ற அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்டுள்ளது .  ஒவ்வொரு செக்டரில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பூங்கா , கடைகள் , ஹோட்டல்கள் , சமூதாய கூடங்கள் , பள்ளிகள் என தனித்தனி பகுதிகள் உருவாக்கபட்டுள்ளது . அனைத்து கட்டிடங்களும் இரண்டு அடுக்குகள் மட்டுமே உள்ளதால் போக்குவரத்து நெரிச்சல் இல்லை ,  மிதிவண்டிகளுக்கு என பெருஞ்சாலையில் தனியே  இடம் ஒத்துக்கப்பட்டுள்ளதால் இங்கு மிதிவண்டியில் செல்பவர்கள் அதிகம் அதுமட்டுமில்லாமல் மிதிவண்டிகள் ஆங்காங்கே வாடகைக்கு நிறுத்தப்பட்டுள்ளது . நகரம் முழுவதும் செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் எந்த பகுதிகளிலும் யார் பெயரிலும் வீதியோ தெருவோ இல்லை . செக்டர் எண் மற்றும் வீட்டின் எண்ணை கொண்டே நாம் செல்லும்  நண்பர்கள் வீட்டை அடையமுடியும் . நீளமான மற்றும் அகலமான நேரான சாலைகள் , சந்திப்புகளில் அழகான ரௌடானாக்கள் அதில் தெளிவாக எழுதப்பட்ட செக்டர் எண்கள் , சாலையின் இரு புறமும் பெரிய பெரிய மரங்கள்  மற்றும் அழகிய பூக்கள் , போக்குவரத்து நெரிசல் மற்றும் ஹாரன் சத்தமில்லாத சாலைகள் என ஊரே அமைதியாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது . இது இந்தியாவின் கனவு நகரமாக விளங்குகிறது . இங்கு சுற்றுலா தலங்கள் பல இருந்தாலும் மிக முக்கியமான சுற்றுலா தலமான "ராக் கார்டன்" (Rock Garden ) பற்றி காண்போம் .

Rock Garden :

Nek Chand :

நெக் சண்ட என்பவர் டிசம்பர் 15ஆம் தேதி 1924 ஆம் ஆண்டு  பஞ்சாப் மாகாணத்தில் உள்ள (Barian Kalan) பரியன் காலன்  என்னும் இடத்தில் பிறந்தவர் . 1947ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் அப்பகுதி பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியானது . அதனால் அவர் இந்திய  பகுதிக்கு குடியேறினார் . அப்போது பஞ்சாப் ஹரியானா மாநிலங்களுக்கு தலைநகராக புதிதாக ஒரு பெரு நகரம் வடிவமைக்க இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்விஸ் கட்டிடக்கலைஞர் லீ கார் (Le Corbusier ) . புதிய தலைநகர் உருவாக்கத்தில் சந்துவுக்கு பொதுப்பணி துறையில் சாலை ஆய்வாளராக வேலை கிடைத்தது . 1958 ஆம் ஆண்டு தொடங்கி தனது ஓய்வு நேரத்தில்  நகரை ஒட்டி உள்ள காட்டில் பழைய பொருட்களை சேர்க்க தொடங்கினார் . சண்டிகர் நகரம் கட்ட பயன்பட்ட பொருட்களின் கழிவுகளைக் கொண்டு சாண்டால் உருவாக்கப்பட்ட தோட்டமே ராக் கார்டன் .

சுமார் 12 ஏக்கரில் உடைந்த பாட்டில்கள் , கண்ணாடிகள் , பீங்கான்கள் , வளையல்கள் , ஓடுகள், உலோக கம்பிகள் என பல தூக்கி எறியக் கூடிய பொருட்களைப் பயன்படுத்தி பூங்கா கட்டப்பட்டுள்ளது .  இதில் கட்டிட கழிவுகளைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி , வாய்க்கால்கள் மற்றும் பல சிற்பங்களை கொண்டுள்ளது .  பல நூறு எண்ணிக்கையிலான விலங்கு சிற்பங்கள் , மனித உருவ சிற்பங்கள்  எல்லாம் மறு சுழற்சி செய்யப்பட்ட பல வகையான உலோகத்தின் மீது கான்கிரீட் முலாம் பூசப்பட்டு உள்ளது .

        உருவங்கள் மற்றும் மண்பாண்டங்கள் , பீங்கான் துண்டுகள் , கண்ணாடி பாட்டில்கள் , தொப்பிகள் என அறிய வகையான நிராகரிக்கப்பட்ட பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது . இந்த ராக் கார்டன் உலக அளவில் புகழ் பெற்று சுற்றுலா தலமாக விளங்குகிறது . இன்று உள்ள சுற்றுச்சூழலில் பழையதைக் கொண்டே உருவாகும் பொழுதுபோக்கு பூங்கா என்பது அவசியமான ஒன்றே .

    

























Shyam Saran Negi

 ஷியாம் சரண் சுகி 

ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில்  வாக்களித்த முதல் நபர் ஷ்யாம் சரண் சுகி நெகி . இவர் இமாச்சல பிரதேசத்தில் ஜூலை 1 , 1917ம் ஆண்டு  பிறந்தவர் . சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் பிப்ரவரி 1952ம் ஆண்டு நடைபெற்றது .  இமாச்சலப் பிரதேசத்தில் பிப்ரவரி மாதம் மிக மோசமான வானிலை காரணத்தாலும் , அதிக பனி பொலிவு இருக்கும் காரணத்தலால் அங்கு மட்டும் ஐந்து மாதங்களுக்கு முன்பே அதாவது அக்டோபர் 25 1951ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது . ஆசிரியராக பணிபுரிந்த நேகி கால்பா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது முதல் வாக்கை செலுத்தினார் . அதன் மூலம் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் வாக்களித்த முதல் வாக்காளர் என்ற பெருமையைப் பெற்றார் . கடந்த 2022 ஆம் ஆண்டு 105 வயதில் இவர் காலமானார் ,  அதுவரை இவர் 34 முறை வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.