Monday, March 1, 2021

அகத்தூர் அம்மன் , காலிங்கராயர் கோயில்

கொங்கு வரலாற்றில் ஒப்பில்லாதவர் காலிங்கராயர் .இவர் கி . பி 13ம் நூற்றாண்டிலேயே முப்போகம் விளையும் வண்ணம் அணைகட்டி , கால்வாய் வெட்டி அவற்றை நாட்டுடமையாக்கினார்  . 


தாங்கள் செய்த அறச்செயலை தானோ தன் சந்ததியினரோ பயன்படுத்துவது நல்லதல்ல என்று எண்ணி அணையையும் கால்வாயையும் நாட்டுடமை ஆக்கி விட்டு , "இனி நானோ என் வழிவந்தவர்களோ இந்த கால்வாயின் தண்ணீரை பயன்படுத்தமாட்டோம்" 

 என்று சத்தியம் செய்துவிட்டு தான் வாழ்ந்த வெள்ளோட்டை விட்டு காவடிக்கா நாட்டில் தன் மாட்டுப் பட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றுக் குழிகள் (ஊத்துக்குளி) இருந்த இடத்தில் புது ஊர் ஏற்படுத்தி அங்கு சென்று வாழ்த்தார் . அந்த இடம் தற்போதைய பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி ஆகும்.


அங்கு அவர்களுக்கும் அந்த ஊர் மக்களை காக்கும் வண்ணமும் அங்கு ஒரு கோயில் கட்டினார் . அது தான் அகத்தூர் அம்மன் . இது தான் காலிங்கராயர் குடும்பத்தின் குலதெய்வம் ஆகும் . முப்பத்தி எட்டு தலைமுறைகள்  கடந்தும் இன்றும் அதே சிறப்புடன் விளங்குகிறது. இக்கோயில் கலிங்கராயர் கட்டினர் என்ற கல்வெட்டு உள்ளது .















No comments:

Post a Comment