Tuesday, September 3, 2019

Halealur , Arkeswara temple


சோழர்களின் வரலாற்றில் "தக்கோலப் போர் " மிக முக்கியமான போராகும் . பராந்தக சோழனின் மகனும் , ராஜராஜ சோழனின் பெரிய பாட்டனாரும் ஆன இராஜாதித்த சோழரின் வீரத்தை பறைசாற்றும் போர் தக்கோலப் போர் .
அரக்கோணத்திற்கு அருகே உள்ள தக்கோலம் என்னும் இடத்தில் கி .பி . 949 ஆம் ஆண்டு இராஷ்டிர கூட அரசன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவருக்கும் , இராஜாதித்த சோழருக்கும் கடுமையான போர் நடந்தது . கன்னர தேவருக்கு துணையாக போர்புரிந்த கங்க அரசன் இரண்டாம் பூதுகன் , இராஜாதித்தர் யானை மீது இருக்கும்போதே குத்திக் கொன்றார் . இராஜாதித்தர் யானை மீதே இறந்தார் , அதனால் "யானை மேல் துஞ்சிய தேவர்" என்று போற்றப்பட்டார் . இப்போரில் சோழர்கள் படை தோற்றது .
சோழர்களை எதிர்த்து பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக விதமாக இரண்டாம் பூதுகன் கர்நாடக மாநிலத்தில் உள்ள (Hale alur) ஹளே ஆளூர் என்னுமிடத்தில் உள்ள ( Arkeswara temple ) அரகேஸ்வரர் கோயில் என்னும் கோயிலை கட்டினார் . கோயிலின் முன் உள்ள நந்தி மண்டப தூண்களில் தக்கோலப் போரின் காட்சிகளை வடித்துள்ளனர் .
நந்தி மண்டபத்தில் உள்ள நான்கு தூண்களிலும் தக்கோலப் போரில் நடந்த நிகழ்வுகளான, இராசாதித்தன் யானை மேலே வீழ்த்தப்பட்ட காட்சிகளை வடித்துள்ளனர் . மேலும் கோயிலை சுற்றி சப்தமாதா சிலைகளும் நடுகற்களும் மற்றும் சில சிற்பங்களும் அழகுடன் காட்சி தருகின்றன .

















No comments:

Post a Comment