Saturday, December 26, 2020

கொங்கில் ஒரு கொற்றவை

 புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்

கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்

(சிலம்பு. வேட்டுவவரி, பா.13)

                    வீரர்கள் கையில் வில்லை ஏந்தி, பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரயைக் கவரப் போகும்போது, தான்கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள்போலும் என்று சிலப்பதிகாரத்தின் வேட்டுவரி கொற்றவை குறித்து பாடுகிறது.

ஆதித்தாயாம் பாலநில எயினரின் திணைக்கடவுளாம் கொற்றவைத் தாய். கொங்குநாட்டில் நடுக்காட்டினுள் மரங்களையே கூரையாகக் கொண்டு நின்றிருக்கிறாள். இந்தத்தாய் முற்சோழர்காலம் (கிபி- 9ம் நூற்றாண்டு) முதலே இங்கு நின்று அனைவரையும் காத்த வண்ணம் உள்ளாள்.

(குறிப்பு - அனைவரையும் காத்த தாயினைக்காக்கும் வண்ணம் இவள் குடிகொண்ட இடம் குறிப்பிட முடியாமை வேதனையே.)








No comments:

Post a Comment