Tuesday, February 9, 2021

கற்திட்டை நம்பியூர் மலையபாளையம்

கற்திட்டைகள் என்பது இறந்தவர்களின் உடலை தாழியிலோ அல்லது அவர்கள் எலும்புகளை பேழையில்  வைத்தோ புதைத்து , அதன் மேல் சதுரவடிவில் நான்கு பக்கம் சுவர்களுடன் மேலே ஒரு பலகை கல்லை வைத்து மூடியது போன்ற ஒரு அமைப்பை கல்திட்டைகள் என்று அழைக்கப்படுகிறது . நான்கு பக்க சுவர்களில் ஒரு பக்கம் மட்டும் வட்ட வடிவில் ஒரு ஓட்டை அமைப்புடன் காணப்படும் . இந்த அமைப்பை இடுத்துளை என்பர்.

                                 ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் என்ற ஊரின் அருகில் மலையபாளையத்தில்  பிரம்மாண்டமான மற்றும் பழமையான கற்திட்டை காணப்படுகிறது .

தற்போது ஒரே ஒரு கற்திட்டை  நல்ல நிலையில் உள்ளது . 

                     வசதிவாய்ப்புகள் எதுவும் இல்லாத காலகட்டத்தில் இவற்றை எவ்வாறு மேலே தூக்கி தூக்கிவைத்திருப்பர் என்பது வியப்பே. கற்கால நாகரீகத்தைப் பறைசாற்றும் இந்த சின்னங்களை அரசும் மக்களும் போற்றி பாதுகாக்க வேண்டும்.







No comments:

Post a Comment