Tuesday, February 9, 2021

விஜயமங்கலம் விஜயபுரிஅம்மன் , குறுப்புநாடு

ஈரோடு மாவட்டம் , பெருந்துறைக்கு அருகே உள்ள ஊர் விஜயமங்கலம் . இவ்வூர் கொங்கு நாட்டின் 24 பிரிவுகளில் ஒன்றான குறுப்பு நாட்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும் . 32 ஊர்களை கொண்ட நாடு குறுப்பு நாடு . அவற்றின் தலைநகரம் விஜயமங்கலம்.  இங்கு உள்ள விஜயபுரி அம்மன் ஆலயம் பழமையானது . ஊரின் பெயரிலேயே அம்மன் அமைந்தது இதன் சிறப்பு . இக்கோயிலில்  மகாபாரத கதையை    விளக்கும் சிற்பம்  உள்ளது . 

பஞ்சபாண்டவர்கள்  ஓராண்டு காலம் மறைந்து வாழ்த்த பகுதி தாராபுரம் என்று கூறப்படுகிறது . அப்போது அர்ஜுனன் தன்னிடம் இருந்த வில்லை விஜயபுரி அம்மனிடம் அடைக்கலப்படுத்தி வைத்திருந்ததாக கொங்கு மண்டல சதங்கம் கூறுகிறது . 


கொங்கு மண்டல சதங்கம்,

"  துளைமணி ரத்ன மகுடா சலத்தைவர் சூதில்நொந்தே

கிளையினை நீங்கி வனவாசம் செய்கையில் கீர்த்திபெற்ற 

விளைவயல் சூழ்மங்கைப் பத்தினிக் கோட்டத்தில் வில்விசயன்

வளைவில் அடைக்கலம் வைத்தது வும்கொங்கு மண்டலமே "


இவ்வாலயத்தின் கிழக்கு சுவற்றில் அர்ஜுனன் தேரில் வருவது போலவும் தனது வில்லை அம்மனிடம் அடைக்கலம் கொடுப்பது போலவும் சிற்பங்கள் உள்ளன . 

இக்கோயிலின் புணரமைப்பின் போது முன்மண்டபத்தில் இருந்த சிம்மத்தூண்கள் அகற்றப்பட்டு கோயிலுக்கு வெளியே வைக்கப்படுள்ளது . அதனுடன் மிகப்பழமையான சில நடுகற்கள் உள்ளன . அவற்றில் மூன்று நவகண்ட சிற்பங்கள் . மக்கள் , நாடு அல்லது அரசன் நலனுக்காக தன்னை தாமே கழுத்தை அறுத்து கொண்டு பலியிட்டு கொண்டு வீரமரணம் அடைவது நவகண்டம் ஆகும் . 












No comments:

Post a Comment