Wednesday, February 10, 2021

ஹொய்சாளர் மல்லிகார்ஜுனகோயில் மாண்டியா கர்நாடக basaralu

ஹொய்சாளர் அல்லது கோசலர் என்று அழைக்கப்படும் ஹொய்சாளர்கள்  தென்னிந்தியாவின் முக்கிய பேரரசுகளில் ஒன்றாகும் .  இவர்கள் கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்த மலை நாட்டைச் சார்ந்தவர்கள் . 

 மேலைச் சாளுக்கியர் ஆட்சிக்குப்பின் நிருபகாமன் (கி.பி 1022 - 1040) கர்நாடக மாநில ஹாசன் மாவட்டத்தில் பேலூரில் , கோசலை மரபை தோற்றுவித்தார் . அவரை அடுத்து வந்த ஹொய்சாள மன்னன் வினயாதித்தன் தலைநகரை பேலூரில் இருந்து ஹளேபேடு  என்னும் இடத்திற்கு மாற்றினார் . இவர்கள் வழிவந்த ஹொய்சாளர்  மன்னன் வீர நரசிம்மர் கர்நாடகம் மாநிலம் முழுவதும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தார் . இவர்கள் தமிழகத்திலும் பல பகுதிகளில் ஆட்சி செய்து உள்ளனர் . தமிழ் கல்வெட்டுகள் இவர்களை போசாளர்கள் என்று குறிப்பிடுகிறது . 

          மாண்டிய மாவட்டத்தில் உள்ள பஸ்ரலு (Basaralu) இன்னும் சிறிய கிராமம் நாகமங்களா (Nagamangala) என்னுமிடத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாண்டியாவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது . 2ம் நரசிம்மரின் தளபதியான ஹரிஹர தனநாயக அவர்கள் கட்டிய மல்லிகார்ஜுனா கோயில் ஒன்று இங்கு உள்ளது . இக் கோயில் ஹொய்சாளர்களின்  தனித்தன்மையுடன் காணப்படுகிறது.  


இக்கோயின் நுழைவாயில் கூடத்தின் இருமருங்கிலும் இரண்டு யானைகள் அமைந்துள்ளன . கருவறை முன் மண்டபம் பல தூண்களுடன் காணப்படுகிறது .  உயரமான மேடையின் மீது கோயில் கட்டப்பட்டு இருக்கின்றது . இக்கோயில்களில் சுவர்களில் நரசிம்மர் , பைரவர் நடனமாடும் சரஸ்வதி , மன்மதன் ரதி ,  காலபைரவர் , சிவயோகி, பலராமன் , நான்கு முக பிரம்மா பிரம்மா , நடனமாடும் பைரவா ஆகிய சிற்பங்கள் உள்ளன . இக்கோயில்களின் சுவர்களில்  அடுக்கடுக்காய் காணப்படும் இச்சிற்பங்கள்  தனித்தன்மையுடன் விளங்குகிறது . அடிப்பகுதியில் யானைகள் குதிரைகள் யானைகள் போன்றவற்றின் அணிகளும் உருவங்களும் காணப்படுகின்றன . ராமாயணம் , மகாபாரத காட்சிகளும் விவரிக்கப்பட்டுள்ளன .  இக்கோயிலில் உள்ள தூண்கள் அனைத்தும் வட்ட வடிவில் காணப்படுகின்றன . இக்கோவிலின் உள்ளே சப்தமாதர் சிலைகள் அழகிய வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது .  இந்தியாவிலுள்ள  கோயில்கள் அனைத்திலும் நுணுக்க வேலைப்பாட்டுக்கு சிறந்த காணப்படுவது ஹொய்சாளர் கோயில்களாகும் .

























No comments:

Post a Comment