Wednesday, February 10, 2021

Arethippura ; Doddabetta , Chikkabetta Mandyadistrict , Karnataka

கர்நாடக மாநிலம் , மாண்டியா மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர் அரெதிப்புரா (Arethippura)  . இது மத்தூரில்   இருந்து 22km தொலைவில் உள்ளது . இவ்வூர் சமணர்களின் புனித தலங்களில் முக்கியமான ஸ்தலமாக விளங்கி இருக்கிறது  . இங்கு தொட்டபெட்டா  (Doddabetta ) ,  சிக்கபெட்டா (Chikkabetta ) அல்லது கனககிரி என இரண்டு மலைகள் உள்ளன . 


தொட்டபெட்டா  மலையின் உச்சியில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான பாகுபலி  சிலை (கி.பி 843 )ஒன்று நின்ற நிலையில் இருக்கிறது .  இது சரவணபெலகுளாவில்  ( கி. பி 973 )உள்ள பாகுபலி சிலையை விட பழமையானதாக கருதப்படுகிறது . இங்குள்ள கல்வெட்டுகளின் படி இது கங்கர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் பின்னர் ஹொய்சளர் ஆட்சியில் இது சிறந்து விளங்கி இருக்கிறது  .  விஷ்ணுவர்தன்  , சமண கோயிலுக்கு திப்பூர் (Tippur )  என்னும் கிராமத்தை தானமாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது .  இது சமணர்களின் முக்கிய தலமாக அப்பொழுது விளங்கியிருக்கிறது  . இங்கு உள்ள பாகுபலி சிலை  சுமார் 10 அடி உயரம் கொண்டது . இது தென்னிந்தியாவின் பழமையான சிற்பமாக கருதப்படுகிறது . 


சிக்கபெட்டா என்னும் மலையில் இடிந்த நிலையில் பழைய சமணக்கோயில் இருந்து இருக்கிறது .  1970ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையினரால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளபட்டபோது இங்கு  சமணக்கோயில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .  இங்கு 12 கோயில்கள் இருந்திருக்கலாம் என்றும்  இதில் ஐந்து கோயில்கள் தெற்கு நோக்கியும் , மூன்று கிழக்கு நோக்கியும் , இரண்டு மேற்கு நோக்கியும்,  இரண்டு வடக்கு நோக்கியும்  இருந்ததாக தெரிகிறது .   அகழ்வாராய்ச்சியின் போது ஆதிநாதர் ,  பாகுபலி ,சரஸ்வதி ,  தீர்த்தங்கர்கள் சிலைகள்  மற்றும் தீர்த்தங்கர்கள் உள்ள தூண்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது . இங்கு உள்ள பாலியின்   அருகே உள்ள பாறையில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன . இது ஒரு காலத்தில் சமணர்களின் புனித தலமாக விளங்கி இருக்கிறது  என்பதற்கு இதுவே சான்று .














No comments:

Post a Comment