Thursday, December 3, 2020

சிவகளை

 தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து இருக்கும் தொன்மையான ஊர் #சிவகளை . செய்வளை , செவலை என்று அழைக்கப்பட்டதே தற்போது சிவகளை என்று மருவியதாக  கருதப்படுகிறது . தாமிரபரணி கரைபுரண்டு ஓடிய காலத்தில் அங்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று போகம் நெல் விளைந்ததாகவும் ஆதாவது

120 வகை நெற்பயிர்கள் விளைந்ததாக கூறப்படுகிறது .


#நெற்பயிர்களின்வகைகள் :

             சிறுமணிநெல், செங்கார்நெல், செந்நெல், (கைதாரம்) சீரகச் சம்பாநெல் , நன்னெல், நல்லசெம்பளைநெல், தில்லைநாயகநெல், ஆனைக்கொம்பனெல், மறுவற்ற செம்பவழச்சம்பா நெல், மணத்தினையுடைய சிறுவெள்ளை நெல், செந்தினாயகநெல், பேற்றினையுத வுக்குலை வாழை நெல், காடைக்கழுத்தானெல், உயர்ந்த சிந்தன் சம்பாநெல், சைவனச்சம்பாநெல், சண்டிக்கார்நெல், பெருவெள்ளை நெல்,கூரனெல், தெய்வநாயகநெல், (தானியோத் தமம்) வால சுரமின்டனெல், பச்சைப்பெருமாணெல், வாரலிநெல், (வராகிச்


சம்பா) நெய்வளத்தினையுடைய புழுகுசம்பாநெல், நெடுஞ்சம்பா செல், சன்னச்சம்பா நெல், உடம்பினை வளர்க்கும் ஈர்க்குச்சம்பா நெல், மிளகிநெல், முத்துச்சம்பாநெல், குருவைநெல், மாப்பிள்ளைச் சம்பா நெல், குருவைக்கிளையானெல், குப்பஞ்சம்பாநெல், (அவச ரச்சம்பா) பொருத்தமான வல்லரக்கனெல், அப்பஞ்சம்பாநெல் (அப்புச்சம்பா) மட்டைக்கார் நெல், மட்டை வெள்ளை நெல், கத்தூரிச்சம்பா நெல், கருவரிச்சம்பாநெல், தோட்டனெல், (செம் பொடிநெல்) கார்த்திகைச்சம்பாநெல், சீங்கண்ணிநெல், நரியலங்க னெல், (சடைரியன்) பூஞ்சம்பாநெல், சொல்லப்பட்ட கலியன சம்பாநெல், (பங்குசாலி, மணக்கற்றைநெல், சித்திரைக்கால னெல், கூர்க்கருப்பனெல், சொன்னவாரிநெல், ஒற்றைக்கொம்ப நெல், கற்சம்பாநெல், ஒட்டுடைநெல், (பருந்தட்டைநெல்) பனை மாரத்தானெல், கொற்றனெல்,(புனச்சம்பாநெல்)குழியடித் தானெல் , சொளுமையுள்ள புழுதிபிரட்டிகெல், ஒளியுள்ள சடையன் காடைச்சழு தானெல், வீதிவிடங்கனெல், வாடன் சம்பாநெல், சிற்றாக்கனெல், அரிக்குராவிசெல், செஞ்சூரைகெல், கருஞ்சூரை நெல், முனைமுறியாத இராசகோபாலநெல், கோடைநெல், திருமுட்டனெல் ,

கல்லுருண்டைநெல்,குறிய நன்னாரிநெல்,மைச்குருவை நெல்,பொடிச்செஞ்சாலி,(செல்லூர்ச்சம்பா) மறுவுள்ள மணல்வாரி நெல், துய்யமல்லிநெல், சொக்கன் சம்பா நெல், மறுவுள்ள உலர்க் குண்டாநெல், குன்றுமணிநெல், சுற்பூரச்சம்பாநெல் சிறிய குடமல்லிச் சம்பாசெல், சிறுமிள கனெல், பாற்சம்பாநெல், (பால்வடியுஞ்சம்பா) பெரியசடைமிளகுசம்பா நெல், உறைப்புறுங் கடுகுசம்பா நெல், அறுபதாங்கோடை நெல், பிட்டனெல், (பிட்டிற்குரிய ஒருவகை நீளநெல்) ஆற்றனெல், (ஆற்றூர்நெல்) பட்டினச்சம்பா நெல், அன்னதான நெல், கைவாட்சம்பா நெல், கருடன் சம்பா நெல், பொன் வண்ணச்சம்பா நெல், குளநெல் (சர்க்கரைச்சம்பா) முதலிய பலவகை (ஈண்டுக் கூறிய நெல்வகை 89ம், ஊசிச்சம்பா, இலுப்பைப் பூச்சம்பா, கம்பன் சம்பா, குங்குமப் பூச்சம்பா, குண்டைச்சம்பா, சொரிகுரும்பை)மோரன் சம்பா, மாலன் சார், சிவன் சம்பா, செம் பிலிப்பிரியன, பிசானன், (பசானம்) மலைகுலுக்கி, மடுவிழுங்கி, பூம்பாளை, முட்டைக்கார், கடப்புக்கார், மோசனன், பிச்சவாரி, ஈசர் கோவை, இறங்குமேட்டான், மணச்சம்பா, (சுகந்திசச்சம்பா)

கேரலி, சாரலி, சாலி, சி.றுகுரும்பை, சீனட்டி, சேமாளை, நரி முருக்கன், பன்றிநெல் (மலைநெல்), பாடலி, (மழைகாலக்கப் பழுக்கும் பாடலம்) நீவாரம், (வனநெல்) நீர்வாரம் (குளசெல்) என மொத்தம் 120 வகை நெற்கதிர்கள் விளைந்து இருக்கிறது .


Source : நற்குடி வேளாளர்




No comments:

Post a Comment