Friday, February 12, 2021

தமிழ் முருகன் - அறிவுமதி

                                                                     தமிழ் முருகன்

                                                                                              அறிவுமதி 

சங்ககால பாடல்களில் முருகனுக்கு மத அடையாளம் ஏதும் காட்டாமல்  இன அடையாளம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது . அதனாலேயே முருகன் "தமிழ் கடவுள்" எனப்படுகிறான் . அதேபோல் முருகன் சிறந்த போர் வீரர் என்றும் மலையும் கடலும் சார்ந்த நாட்டை ஆண்டுவந்ததாகவும் சங்ககால பாடல் வரிகளைக் கொண்டு விளக்கியிருக்கிறார் . தலைவனாக விளங்கிய முருகன் யானை மீது அமர்ந்து போரிட்டதை விளக்க சங்கப் பாடல் வரிகளை  மேற்கோள் காட்டியதுடன் பழமையான  கோயில்களில் உள்ள  முருகன் யானை மீது அமர்ந்து இருக்கும் படங்களைக் கொண்டும் விளக்கியிருக்கிறார் .


  நெய்தல் நிலமான திருச்செந்தூரிலும் குடி கொண்டு இருக்கிறார் . ஆழிப்பேரலையில் மூழ்கிய குமரிக் கண்டத்தை முருகனின் ஆட்சி செய்தான் என்றும் , கொற்றவையின் மகன் முருகன் என்றும் , முருகனுக்கு ஆடு பலி கொடுக்கப்பட்டதாகவும் சங்கப் பாடல் வரிகளைக்  கொண்டு விளக்குகிறார் . முருகனை  கந்தனாக மாற்றி இன்று பெருங்கடவுள்களில் ஒருவனாக ஆக்கப்பட்டதை விளக்குகிறார் ஆசிரியர் . தன் குழந்தைகளுக்கு முருகன் என்று பெயர் வைத்து மகிழ்ந்த சமூகம் இன்று மாறி விட்டதை  நமக்கு விளக்குகிறது இந்த புத்தகம் . நாட்டை ஆண்ட மன்னன் தமிழினம் காக்க போராடிய மன்னன் என்று இன்று எவ்வாறு ஆக்கப்பட்டு உள்ளார் என்பதை புரிந்து கொள்ள உதவும் நூல் இது .


No comments:

Post a Comment