Thursday, February 10, 2022

வரலாற்றில் அரிக்கமேடு : புலவர் ந . வேங்கடேசன்

      புதுச்சேரிக்கு அருகே வங்கக்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பழமையான மறைந்து போன நகரம் அரிக்கமேடு .  அரியாங்குப்பம் என்ற இடத்திற்கு அருகே உள்ள மேடு தான் அரிக்கமேடு .

      1937 ஆம் ஆண்டு அரிக்கமேட்டைச் சேர்ந்த சிறுவர்கள் மேற்புறத்தில் கிடைத்த பொருட்களை பிரஞ்சுப் பேராசிரியர் மூவோ துப்ராய் அவர்களிடம் கொடுத்தனர் . அவர் மேலும் இவ்விடத்தை ஆராய்ந்ததில் கிடைத்த கல்லொன்றில் ரோமானியப் பேரரசன் அகஸ்டஸின்  தலை உருவம் பொறிக்கப்பட்டிருந்தது . பின்னர் மார்ட்டின் லிவர் என்பவர்  இவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார் .

  பின்னர் தொல்லியல் துறை அகழாய்வு செய்தபோது இரண்டு கைப்பிடி கூர்முனை உடைய அம்போரா எனப்படும் மது ஜாடிகள் , ரோம் விளக்குகள் ,  கண்ணாடிப் பாத்திரங்கள் என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது . இந்நகரம் மாபெரும் வணிகத் தளமாக விளங்கி இருக்கும் என்பதை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.

                பழங்காலத்தில் இப்பகுதி உலக சந்தையை பெற்றுத்தந்த பெருநகரமாக இருந்துள்ளது . முக்கிய தொழிலாக  மஸ்லின் துணிகளுக்கு சாயமிடும் தொழில் இருந்திருக்கிறது . மஸ்லின் துணியை சாயம் தயாரிக்கவும்  சாயமிடவும் உதவும் குளம் கண்டுபிடிக்கப்பட்டது . கிமு 23 முதல் கிபி 14 வரை பழக்கத்தில் இருந்த ரோம பேரரசின் நாணயங்கள் இங்கே கிடைக்கின்றன .

             யவனர்கள் உடனான இவ்விடத்தின் தொடர்பு பற்றி மிக விளக்கமாக விவரிக்கிறது இந்நூல் . அரிக்கமேடு எவ்வாறு வணிகத்தில் சிறப்புற்று இருந்தது என்பதையும் , இங்கு ஆய்வு செய்தவர்களை பற்றியும் , அகழாய்வு செய்து எடுத்த பொருட்கள் பற்றியும் மேலும் இங்கே அகழாய்வு செய்வத்தின் அவசியத்தைப் பற்றியும் கூறுகிறது இந்நூல் .  பழங்கால நகரத்தை பற்றியும் , அகழாய்வு இடங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள்   இந்நூலை அவசியம் படிக்க வேண்டும் நன்றி



No comments:

Post a Comment