Saturday, December 5, 2020

ஈரோடு அந்தியூர் தேவர்மலை நடுகல்

 மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகான மலைத்தொடரில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் அந்தியூர் வனப்பகுதியும் ஒன்றாகும் . அங்கு உள்ள மலையில் தேவர் மலை என்ற மலைக்கிராமம் அமைந்து உள்ளது . அந்த சிறு கிராமத்தில் பந்தீசுவரர் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் பந்தீஸ்வர் மற்றும் வீரபத்திரருக்கு சிறப்பான வழிபாட்டு  நடக்கிறது . இக்கோயிலில் உள்ள  ஒரு சிறிய பலகைக் கல்லில் கல்வெட்டு ஒன்று உள்ளது . 

இந்த கோவிலுக்கு வெளியே மூன்று நிலையில் நடுகல் ஒன்று உள்ளது. மூன்றுநிலை நடுகல்லில் கீழிருந்து முதல் நிலையில் நடுவில் வாளுடன் வீரன் ஒருவன் உள்ளார். அவரது இருபுறமும் இரு மனைவியர்கள்  உள்ளனர், கையில் மதுக்குடுவையுடன் இருப்பதானால் சதியேறியதாகக் கருதலாம். இரண்டாம் நிலையில் சொர்க்கம் செல்லும் காட்சியும் மூன்றாம் நிலையில் நந்தியுடன் லிங்கமும் அதற்கு பூசை செய்பரும் காட்டப்பட்டுள்ளனர்.

எனவே இதனை நாம் வீரனுடன் உயிர்நீத்த  சதிக்கல்லாக கருதலாம். மூன்றுநிலையும் கைலாசமும் உள்ளதால் இதனை லிங்காயத்து இன மக்களின் நடுகல்லாக கருத வாய்ப்புள்ளது.













No comments:

Post a Comment