Wednesday, February 16, 2022

மாபெரும் சபைதனில் : உதயச்சந்திரன்

மாபெரும் சபைதனில்
ஆசிரியர் : உதயச்சந்திரன்

ஈரோடு மாவட்டம் புத்தக திருவிழா நிகழ்வில் இவர் ஆற்றிய உரையை கேட்டு வியந்து இருக்கின்றேன் . தற்போது அவரின் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்பும் அமைந்தது இனிமை .
 நாற்பது தனித்தனி கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் . ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் கடந்து சென்ற முக்கிய வரலாற்று , விளையாட்டு , இயற்க்கை பேரழிவு , அறிவியல் ,ஓவியம் என பல நிகழ்வுகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் தரும் புத்தகம் . திரு . உதயச்சந்திரன் அவர்கள் தான்  இதுவரை அரசாங்க பணியாற்றிய இடங்களில் நடந்த சிறு சம்பவங்களையும் அதனுடன் தொடர்புடைய வரலாற்று செய்திகளையும்  இணைத்து தந்துள்ளார் .

சர் . தாமஸ் மன்றோ கலெக்டராக பணியாற்றியபோது  மக்களிடம் பெற்ற செல்வாக்கு எத்தகையது என்பதையும் ,இந்தியாவிற்கு முதன்முதலில் வந்த இரயில் பற்றியும் , சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்கள் அவற்றின் அழகியலையும் , ஜான் சல்லியனின் நீலகிரி பயணத்தையும் , பென்னி குயிக் மீது மக்கள் கொண்டுள்ள அன்பு பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது . அசோகனின் கல்வெட்டு சொல்லும் செய்தி , கீழடி தமிழரின் பெருமை என்பதையும்  அகழ்வாய்வின் அவசியத்தையும் , மகாத்மா பேசிய தமிழ் பற்றியும் , மதுரை கலெக்டர் பிளாக்பர்ன் பயன்படுத்திய சொல் ஆயுதம் பற்றியும் , தமிழில் முதன் முதலில் வந்த அச்சு நூல் எது ? என பல வரலாற்று பொக்கிஷங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது . திரு உதயச்சந்திரன் அவர்களுடன்  புதிய பாட நூல் உருவாக்கத்தில் பணியாற்றியர்கள் பற்றியும் , தான் நடத்திய தேர்தல் , ஜல்லிக்கட்டு பற்றியும் , அமெரிக்காவில் தான் சந்தித்த நண்பர்களிடம் காணப்படும் நம் மண்ணின் நினைவுகளையும் , தான் உயரக் காரணமாக இருந்த தன் ஆசிரியர் மற்றும் தன் தாய் பற்றியும் சொல்லும் கட்டுரைகளில் மனம் நெகிழ்கிறது .  மண்டேலாவின் விளையாட்டு ஆர்வம் , ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் குழந்தைகளில் காணப்படும் கற்றல் குறைபாடு என உலக அறிவியல்  செய்திகளையும் விவரிக்கிறது இந்நூல் . ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் குறிப்பிடும் சபைக்குறிப்பு முக்கியமான ஒன்று . ஆட்சியாளர்கள் எங்கெல்லாம் கவனமாக செயல்பட வேண்டும், எங்கு இரக்கப்படவேண்டும் , எங்கு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக  காட்டுகிறார் . 

இப்புத்தகத்தில் அவரின் தமிழ் வார்த்தைகளின் கோர்வை மிக நேர்த்தியாக உள்ளது . ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளார் . இவர் தொல்லியல் துறையில் பணியாற்றியபோது இவரின் முனைப்பால் தொல்லியல் ஆர்வலர்களுக்கு  நடத்திய ஐந்து நாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது .  அப்போது இவரின் ஆளுமையை கண்டு வியந்துள்ளேன் .  புத்தகத்தின் தலைப்பு இவருக்கே பொருத்தமாக உள்ளது .



Thursday, February 10, 2022

வரலாற்றில் அரிக்கமேடு : புலவர் ந . வேங்கடேசன்

      புதுச்சேரிக்கு அருகே வங்கக்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பழமையான மறைந்து போன நகரம் அரிக்கமேடு .  அரியாங்குப்பம் என்ற இடத்திற்கு அருகே உள்ள மேடு தான் அரிக்கமேடு .

      1937 ஆம் ஆண்டு அரிக்கமேட்டைச் சேர்ந்த சிறுவர்கள் மேற்புறத்தில் கிடைத்த பொருட்களை பிரஞ்சுப் பேராசிரியர் மூவோ துப்ராய் அவர்களிடம் கொடுத்தனர் . அவர் மேலும் இவ்விடத்தை ஆராய்ந்ததில் கிடைத்த கல்லொன்றில் ரோமானியப் பேரரசன் அகஸ்டஸின்  தலை உருவம் பொறிக்கப்பட்டிருந்தது . பின்னர் மார்ட்டின் லிவர் என்பவர்  இவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார் .

  பின்னர் தொல்லியல் துறை அகழாய்வு செய்தபோது இரண்டு கைப்பிடி கூர்முனை உடைய அம்போரா எனப்படும் மது ஜாடிகள் , ரோம் விளக்குகள் ,  கண்ணாடிப் பாத்திரங்கள் என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது . இந்நகரம் மாபெரும் வணிகத் தளமாக விளங்கி இருக்கும் என்பதை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.

                பழங்காலத்தில் இப்பகுதி உலக சந்தையை பெற்றுத்தந்த பெருநகரமாக இருந்துள்ளது . முக்கிய தொழிலாக  மஸ்லின் துணிகளுக்கு சாயமிடும் தொழில் இருந்திருக்கிறது . மஸ்லின் துணியை சாயம் தயாரிக்கவும்  சாயமிடவும் உதவும் குளம் கண்டுபிடிக்கப்பட்டது . கிமு 23 முதல் கிபி 14 வரை பழக்கத்தில் இருந்த ரோம பேரரசின் நாணயங்கள் இங்கே கிடைக்கின்றன .

             யவனர்கள் உடனான இவ்விடத்தின் தொடர்பு பற்றி மிக விளக்கமாக விவரிக்கிறது இந்நூல் . அரிக்கமேடு எவ்வாறு வணிகத்தில் சிறப்புற்று இருந்தது என்பதையும் , இங்கு ஆய்வு செய்தவர்களை பற்றியும் , அகழாய்வு செய்து எடுத்த பொருட்கள் பற்றியும் மேலும் இங்கே அகழாய்வு செய்வத்தின் அவசியத்தைப் பற்றியும் கூறுகிறது இந்நூல் .  பழங்கால நகரத்தை பற்றியும் , அகழாய்வு இடங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள்   இந்நூலை அவசியம் படிக்க வேண்டும் நன்றி



ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் : ஆசிரியர் முகில்

                      1889 ம் ஆண்டு ஏப்ரல் 20 , மாலை 6:30 ஆஸ்திரிய நாட்டில் உள்ள Gasthof  Zum Pommer என்ற சிற்றூரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் , நமது நாயகன் ஹிட்லர் . பிறந்த போது இன்னும் இரண்டு மாதங்களே குழந்தை உயிருடன் இருக்கும்  என்று கணித்த மருத்துவச்சியின் வார்த்தையை பொய்யாக்கிய அக்குழந்தை ,  வளர்ந்ததும் உலகத்தையே மிரட்டியது . படிப்பும் வராமல் , நோஞ்சான் உடம்புடன் , ஓவியராக வேண்டும் என்ற லட்சியத்தையும் அடைய முடியாமல் தவித்தவர் , எவ்வாறு உலகமே அஞ்சும் சர்வதிகாரியாக மாறிய வரலாறு இப்புத்தகம் . ஹிட்லர் என்றாலே கொடுங்கோல் மனிதன் என்று நம் மனதில் தோன்றும் எண்ணம் . இந்த எண்ணம்  சரியா தவறா என்று நாம் அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும் .

    தந்தையின் அதீத கண்டிப்புடன் , தாயின் பேரன்புடனும் தொடங்கியது ஹிட்லரின் இளமைப் பருவம் . பருவ வயது வந்தவுடன் காதல் வயப்படுதல் , கவிதை எழுதுதல் , ஓவியம் வரைதல் , புத்தகம் படித்தல் என்று  சாமானிய மக்களின் வாழ்க்கையே வாழ்ந்தார் . இளைஞர்ரானதும்  வேலை கிடைக்காமல் , நிரந்தர  முகவரி இல்லாமலும்  தாயையும் இழந்து தனிமையில் தவித்த ஹிட்லருக்கு , புத்தகம் படிப்பது ஓவியம் வரைவது என்பது மட்டுமே பொழுதுபோக்காக இருந்தது .  பிறப்பால் ஜெர்மரான ஹிட்லர் , முதலாம் உலகப்போரில் ஜெர்மனி அடைந்த தோல்வியால் மனம் துவண்டார் . அதற்கு காரணமான நாடுகளையும் யூதர்களை பழிவாங்க துடித்தார் . ஜெர்மனி மீது கொண்ட நாட்டுப்பற்றால் ஜெர்மனி ஜெர்மனியருக்கே என்ற எண்ணத்தை மக்களிடம் விதைக்க  பேச்சாளராக ஆரம்பித்த அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக வளர்ந்து அதிபர் ஆனார் . 

      அதிபரானதும் ஹிட்லரின் மற்றொரு முகம் தெரிய ஆரம்பித்தது . " தானே அதிபர் , தானே சர்வாதிகாரி , தானே முப்படைத் தளபதி , தானே கடவுள் என்று அதிரடியாக செயல்பட்ட வரை கண்டு உலகமே நடுங்கியது . அதிபராகி அவர் நடத்திய தேர்தல் எல்லாம் வேற லெவல் . யூதர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை ஜெர்மனி மக்களின் மனதில் ஆழமாக விதைக்க உக்கிரமாக செயல்பட்டார் . அரசு கொடுக்கும் செய்திகளை மட்டுமே பத்திரிகைகள் வெளியிட வேண்டும் என்று , பத்திரிகையின் சுதந்தரத்தை முழுவதுமாக தடை செய்தார் . குறைந்த விலையில் ரேடியோ வழங்கி அதில் தம் புகழ் பாட வைத்து மக்கள் சிந்தனை முழுவதும் நிறைந்தார் .

                            உலக நாடுகளிடம் நல்லவன் என்ற முகமூடி அணிந்து ஒலிம்பிக் போட்டியை நடத்தி உலக மக்களின் நன்மதிப்பைப் பெற்றார் . உலகில் சிறந்த அரசியல் தலைவர்களில் ஹிட்லரும் ஒருவர் என்று கொண்டாட வைத்தார் .

 யூதர்களை ஜெர்மனி விட்டே துரத்த நினைத்தவர் , காலம் செல்ல செல்ல உலகை விட்டே அனுப்ப முடிவு எடுத்தார் . மண்ணாசையும்  பழிவாங்கும் எண்ணமும் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது .  ஹிட்லருக்கு மட்டுமா மண்ணாசை ? பிரான்சு பிரிட்டன் , சோவியத் யூனியன் , ஜப்பான் , இத்தாலி என பல நாடுகள் உலகை ஆள வேண்டுமென்று ஆசைப்பட்டனர் . 

  1918 இல் முதல் உலகப் போரில் பிரான்சு ஜெர்மனியை  அவமானப்படுத்தியதற்கு  பழிதீர்க்க எண்ணினார் ஹிட்லர் . முதல் உலகப் போரில் ஜெர்மனி பிரான்ஸிடம் தோற்று சரணடைந்த போது , பிரான்சு கான்பீன் என்ற இடத்தில் , ஒரு காலி ரயில் பெட்டியில் வைத்து ஜெர்மனியிடம் கையெழுத்து வாங்கியது . இதற்கு பலி தீர்க்க 1940 ஆம் ஆண்டு பிரான்சை வென்ற ஹிட்லர் அதே இடத்தில் முதல் உலகப் போர் சரணாகதி ஒப்பந்தத்தை விட மோசமான ஒப்பந்தத்தில் பிரான்சை கையெழுத்திட வைத்தார். இப்படி பழிதீர்க்கும் படலத்தை அழகே அரங்கேற்றினார் . இப்படி அடுக்கடுகான வெற்றியால் ஹிட்லர் மிக மோசமான  முடிவுகளையும் எடுக்க  ஆரம்பித்தார் . அதுவே சோவியத்துடனான போர் .

                    சோவியத் யூனியன் ஸ்டாலின்கிராடு மீதான போரில் ஜெர்மனிக்கு மிகுந்த இழப்புகள் ஏற்பட்டன . உணவு பற்றாக்குறை , அதீத குளிர் போன்ற பல காரணங்களால் ஜெர்மனி வீரர்கள் அவதிப்பட்டனர் . தளபதிகள் படையை திரும்ப அழைக்க அறிவுறுத்தினர் . அவர்களின் ஆலோசனையை  நிராகரித்ததுடன் வீரர்களின் கோரிக்கையையும் கண்டுகொள்ளாமல் அவர்களின் நிலை கண்டும் மனம் இரங்காத ஹிட்லர் வெற்றியை மட்டுமே எதிர்பார்த்தார் . குண்டடிபட்டு இறந்தவர்களை விட குளிர்  , பசி நோயால் இறந்தவர்கள் அதிகம் . அதனால் சோவியத் படையினர் தங்களை தயார்படுத்திக் கொண்டு வேகமாக முன்னேறினர் . ஜெர்மனியின் கிழக்கே சோவியத் படையினரும்  மேற்கே நேசப் படைகளும் கைப்பற்றியது . பிரான்ஸ்யை ஹிட்லரின் பிடியில் இருந்து விடுவிடுத்தும் அடுத்த இலக்கு இலக்கு ஜெர்மனி தான் என்ற நிலையே இருந்தது , அதிலும் முக்கியமாக ஹிட்லரின் உன்னத உயிருக்கு தேதி குறிக்கப்பட்டது . முதலாம் உலகபோரில் ஜெர்மனி சரணடைந்ததால் ஏற்பட்ட அவமானத்தை மீண்டும் ஜெர்மனிக்கு ஏற்படுத்த ஹிட்லர் அனுமதிக்கவில்லை .


 1945 , ஏப்ரல் 20 ஹிட்லரின் 56வது பிறந்தநாள் , தலைவர் உயிருக்கு ஆபத்து அதனால் முக்கியமானவர்கள் அவரை தலைமறைவு ஆக சொல்லி வேண்டினர் . "இறுதி வரை பெர்லினில் இருந்தே போராடுவேன்" என்று அவர்கள் கோரிக்கையை மறுத்து விட்டார் . என் உயிரை எடுக்கும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு என்று  உறுதியாக கூறிய ஹிட்லர் , எதிரிகளின் கையில் தனது உடலின் சாம்பல் கூட சிக்க கூடாது என்று தனது மரணத்தை திட்டமிட்டார் . தன்னுடன் மரணத்திலும் சேர்த்து வர எண்ணிய  ஈவாவை ஏப்ரல் 28  சட்டப்படி திருமணம் செய்து கொண்டார் . இறுதியாய் எழுதிய தன்னுடைய மரண சாசனத்தில் ஜெர்மனி மக்களுக்கும் வீரர்களுக்கும் நன்றி சொன்னதுடன் தன் சொத்தை நாட்டிற்க்கே அளிக்குமாறு எழுதியுள்ளார் . தன் இறுதி நொடியில் கூட  யூதர்களிடம் அவர் கொண்ட வெறுப்பு மாறவே இல்லை . யூதர்களிடம் கருணை காட்ட வேண்டாம் என்றும் எச்சரிக்கையாய் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் . 1945 ஏப்ரல் 30  தனது மரணத்தை தானே ஏற்படுத்திக்கொண்டார் .                         யூதர்கள் எவ்வாறு எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டார்கள் என்பதைப் பற்றி தனியே  23ம் அத்தியாயத்தில் ஆசிரியர் கூறியுள்ளார் . அதை படிக்க தனி மனஆற்றல் வேண்டும் . கொடூர படுகொலைகளும் ,மனிதத் தன்மையற்ற செயல்களும் நம்மை மிரள வைக்கிறது . Concentration camp என்ற சித்திரவதைக் கூடங்களில் யூதர்கள் மட்டுமின்றி ஹிட்லரை எதிர்ப்பவர்களும் இடம்பிடித்தனர் . இவர்களைக் கொண்டு உயிரை பணயம் வைக்கும் அபாயகரமான வேலைகள் செய்ய வைப்பது , விஷ வாயு கூடங்களில் அடைப்பது , ஆய்வுக்கூடத்தில் பரிசோதனைக்கு எலிக்கு பதிலாக இவர்களை பயன்படுத்துவது , நிற்க வைத்து சுட்டு தள்ளுவது என பலவிதமான கொடூரங்கள் நடத்தப்பட்டன . இதை செய்த நாஜிகள் மன நலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு . சுமார் 50 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் .

                               மனித கொலைக்காட்சிகளை விரும்பி பார்க்கும் ஹிட்லருக்கு விலங்குகளை வேட்டையாடுவது , வதைப்பது என்பது ஆகாத செயல் . நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும் . அதேபோல் சாப்பிடும் விஷயத்தில் அவர் சுத்த சைவம் . சாக்கலேட் , ஐஸ்கிரீம் என்றால் கொள்ளைப்பிரியம் . இப்படி பல வினோத குணங்களை கொண்டவராக இருந்துள்ளார் . 

                             

அவர் ஆட்சிக்காலத்தில் ஜெர்மனியில் விபசாரம்   நடக்காமல் பார்த்துக்கொண்டார் . ஜெர்மனி பெண்கள் மத்தியில் இவர் ஹீரோவாக வலம் வந்தார் . அதனாலேயே இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்றும் கூறப்படுகிறது . அரசியலில் ஈடுபட்டத்தில் இருந்து இவர் மேல் பல கொலைமுயற்சிகள் நடந்தன . எல்லாவற்றிலும் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார் . 

  இவர் விதைத்த விதையான யூதர்கள் வெறுப்பு இவர் இறப்புக்கு பின்னும் ஜெர்மனியர்கள் மனதில் இருந்து கொண்டே இருந்தது . சர்வதிகாரியாக வலம் வந்த ஹிட்லர் பற்றி முழுமையாக தெரித்து கொள்ள இந்த புத்தகம் உதவும் .

           ஆசிரியர் முகில் அவர்களின் எழுத்துக்களில் வரலாற்றை படிப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது . ஒரு மனிதனின் முழு வரலாற்றை கொஞ்சமும் போராடிக்காமல் , கற்பனையை சேர்க்காமல் எழுதி இருப்பது அருமை . இவர் புத்தகத்தை எல்லாம் பள்ளியில் படிக்கும் போதே கிடைத்து இருந்தால் ஒருவேளை நானும் வரலாற்று ஆய்வாளராக வலம் வந்து இருப்பேன் . வரலாற்று பிரியர்கள் அனைவருக்கும் இவரின் வரலாற்று நூல்களை படிக்க வேண்டும் என்று கேட்டிக்கொள்கிறேன் .



Sunday, September 19, 2021

Sri Arulmigu Sivalapuri Amman Temple / அருள்தரும் ஸ்ரீ சிவளாபுரி அம்மன் திருக்கோவில், நடுவச்சேரி and Hero stones, Naduvachery / Naduvacheri, Tiruppur District, Tamil Nadu.

The visit to this Sri Sivalapuri Amman Temple at Naduvachery / Naduvacheri was a part of Heritage visit to the temples, heritage sites and Hero stones from Vijayamangalam to Avinashi, on 07th August 2021. This place was called as Sevalaipoondi in olden days


The Main Deity        : Sri Sevalapuri Amman

Some of the salient features of this temple are…
The Temple is facing north with an entrance arch. Stucco image of Sevalapuri Amman is on the front and back of the arch. A Swing, a Deepa Sthambam with Mandapam ( one of the pillar has the image of the donor ) and Kundam are after the entrance arch. A 2 tier Rajagopuram is at the entrance of temple with Sri Sevalapuri Amman’s stucco image on the top. Amman in the sanctum is with 8 Hands. ( May be Bathrakali – please refer the details given below ). In Koshtam, Manonmani, Goumari, Uma Maheswari, Durga and Vishnu Durgai.

Simha Vahana, Dwajasthambam, Balipeedam, Trishul are in the Mukha mandapam.  A Big size Male and female ( Village style ) Dwarapalaka and Palaki are at the entrance of the Ardha mandapam

In prakaram the Sthala Vruksham Kila maram, with two memorial / Hero stones, Vinayagar and many Hero and sati Stones are under tree near Vinayagar shrine. 

ARCHITECTURE
The Temple consists of  sanctum sanctorum, ardha mandapam and a open Mukha mandapam. The mukha mandapam ceiling has the bas- relief of Avinashi Sri Avinashilingeswarar temple’s sthala purana – a Child comes out of Crocodile’s mouth, and symbolic representation of Solar and Lunar eclipse through Snakes, sun and moon.

A two tier Gopura is on the sanctum sanctorum with stucco images of Amman’s various Avadharas, Vinayagar, Murugan, Vimanam Tangis etc,. 

The Ardha Mandaapam and Mukha mandapam pillars has interesting bas- reliefs. Based on the style, these may belongs to Vijayanagara Nayaks period. One of the relief is little interesting. A Shiva Linga is shown on one woman’s head. ( A pallipadai temple…? ).





HISTORY AND INSCRIPTIONS
Since the original temple’s details are not known, experts are of the opinion that the present temple may belongs to 16th to 17th Century.  As per Chozha’s Poorva pattayam, The Chera king along with Mudali sadaiappan and Kathoori Rangappa Chetti, came to this place after worshiping Lord Shiva of Konapuri. When Cheraman Perumal wishes to establish a Village on his name, asked the Hunters / Vedars to clear the forest, the Seval BardraKali, who guards this “Sevalapoondi” forest came and asked Chera King a “Bali”. The Chera King promised to give a bali after constructing a temple for her.  As promised Chera King  constructed a temple for that Durga and gave mupbali முப்பலி – Goat-Pig- Cock. After clearing the forest this place “Naduvan Chery”  ( Latter called as Naduvachery ), with Fort and an eri / Tank was established by Chera King Cheraman Perumal in the name of a Person “Naduvan”, an Irulan who was residing in this forest.

The Sengunthar Mudaliars of Annadhana Chatram Gothram ( Samayam Pattakarar ) and Annanooran Gothram, those belongs to Palani, Dindigul, Naduvacheri, Avinashi, Annur, Coimbatore and Tirupur worships Sevalapuri Amman as their Kula deivam.

In the 1891 CE,   Nallasiva Veera Chetty’s son Murugan Chetty, who belongs Kottai Velampalayam excavated the Theertha Well and constructed the Compound Wall.

In 1891 CE ( kaliyuga 4992 ), the entrance mandapam with doors are gifted by the Karukkampalayam Periyayi Palayam Samy Chettiar’s son Nanjappa Chettiar.



Another damaged inscription records the renovation of the temple, painted on the inscriptions and what it records is not known.Many words do not have any meaning.

  1. ஸ்வத்திஸ்ரீ…?) ….வயாத்த 14    செ
  2. 100 சேவல   வீறன் வநல்
  3. (ரோம்தட்சணயனத்தில் ப்
  4. கத்தில் சத்த மயம் தப மோக
  5.  னமத்து சிக்க  தேவர் சக
  6. (வய )    தனமலி  தாசிப 
  7. ட்டக்….. லி
  8. மக்கு…. கன்….. 

As per Kongu Satakam, Sevalapuri was one of the 35 Villages of Arai Nadu. The Kongu Satakam goes like this.... 
ஆறைநாடு
சேவைநகர் அன்னியூர் வெள்ளாதி கோமங்கை
            திசைபுகழ வாழ்முடுதுறை
தென்கவசை துடியலூர் நீல நகர் பேரையொடு
            தெக்கலூர்கரை மாதையூர்

மேவுபுகழ் அவிநாசி கஞ்சைகா னூர்கரவை
            வெண்பதியும் இருகாலூரும்
விரைசேரும் உழலையொடு வடதிசையில் உறுகின்ற
            வெள்ளையம் பாடிநகரும்

நாவலர்க்கு இனிதான திருமுருகன் பூண்டியொடு
            நலசெவளை பழனைநகரும்
நம்பியூ ரோடெலத் தூருக்கிரம் புலவர்
            நகரமுடன் இனிமையான

கோவில்நகர் தொண்டைமான் புத்தூரு முட்டமே
            கூடலூர் சிங்கநகரும்
குடக்கோட்டூர் குள்ளந் துறைப்பதியு  வாள்வந்தி
            கோட்டைக்கரை ஆறு நாடே 

LEGENDS
A prehistoric peoples arrow sharpening place, at Ganeshapuram a part of Karukkampalayam ( 3 KM away from this temple ) is associated with the sthala purana of this temple. Local people believes that these shallow pits are due to the Sevalapuri  Amman kneeled down and played here and these are the markings of Amman’s knees.

Devotees prays Amman for Child boon, to remove marriage obstacles, Graha doshas, etc,.

POOJAS AND CELEBRATIONS
Apart from regular poojas, special poojas are conducted on Pournami, Amavasya. Aadi Amavasya, Fridays, etc,. In Chithirai month Kundam festival is conducted in a grand manner.

TEMPLE TIMINGS
The temple will be kept opened between 07.00 hrs to 10 hrs and 17.00 hrs to 19.00 hrs.

CONTACT DETAILS
Since the temple is under the control of Avinashi Avinashilingeswarar Temple, The officials may be contacted on the land line 04296 – 273113 and 274113 may be contacted for further details.

HOW TO REACH
The temple is on the Avinashi – Naduvachery – Koottapalli Road.
The temple is 1 KM from the Village, 7 KM from Sevur, 13 KM from Avinashi, 17 KM from Kunnathur, 20 KM from Avinashi, 50 KM from Coimbatore and 460 KM from Chennai.
Nearest Railway station is Tiruppur

LOCATION OF THE TEMPLE : CLICK HERE










Solar and Lunar eclipse & Avinshi Temple Sthala purana


The Shiva Linga above this lady's head.. means What..?.. and right side is a donor
--- OM SHIVAYA NAMA ---

Friday, September 10, 2021

கொங்கு கோயில்கள்

1 ) திருப்பூர் மாவட்டம் , விஜயமங்கலம் , கரிவரதராஜ பெருமாள் கோயில்

 2) திருப்பூர் மாவட்டம் , தளவாய்பாளையம் , காசி விசாலாட்சி கோயில்

3) ஈரோடு மாவட்டம் , பூந்துறை சமண கோயில்

4) கோவை மாவட்டம் பொள்ளாச்சி, அகத்தூர் அம்மன் 

5) ஈரோடு மாவட்டம் , கொடுமணல் கோயில்கள்

6. அருள்தரும் ஸ்ரீ சிவளாபுரி அம்மன் கோயில், நடுவச்சேரி


விஜயமங்கலம் , கரிவரதராஜ பெருமாள் கோயில்

 கொங்கு நாட்டிற்கு உட்பட்ட குறுப்பு நாட்டில் அமைந்த புகழ்பெற்ற ஊர் "விஜயமங்கலம்" . பழங்காலத்தில் "வாகை புத்தூர்" என்றும் " வாகை" என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது . இங்கு புகழ்பெற்ற "நெட்டை கோபுரம்" என்னும் சமணக் கோயில் , நாகேஸ்வர சுவாமி கோயில் , விஜயபுரி அம்மன் கோயில் , கரிவரதராஜ பெருமாள் கோயில் மற்றும் பல கோயில்கள்  உள்ளன .   கரிவரதராஜ பெருமாள் கோயில் பற்றி இங்கு காண்போம் .

                    "சித்திரமேழி விண்ணகர  நாயனார் கருமாணிக்க ஆழ்வார் " என்று  இறைவனையும் , "திருமேற்கோயில் " "சித்திரமேழி விண்ணகரம் " என்று கோயிலையும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . உழவை தொழிலாகக் கொண்டு ஏரைத் தெய்வமாக வணங்கிய வேளாண் குடியை சேர்ந்த வெள்ளாளர்களின் குழுதான் "சித்திரமேழி பெரியநாட்டார் சபை " என்பது . அவர்கள் பெயரில் இக்கோயில் அமையப் பெற்றிருக்கிறது . " சித்திர மேழி விண்ணகர கருமாணிக்க ஆழ்வார்" என்று கல்வெட்டில் குறிப்பிடப்படும் இறைவன் பெயர் இப்போது "கரிவரதராஜ பெருமாள்" என்று அழைக்கப்படுகிறது . கருவறையில் பெருமாள் , ஸ்ரீ தேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் . கோயிலில் கருடாழ்வார் , ராமானுஜர் , நம்மாழ்வார் உருவங்கள்  உள்ளன . கருவறையை சுற்றி  மூன்று தேவகோஷ்டங்களும் அவற்றிற்கு மேலே வேலைபாடில்லாத மகர தோரணங்கங்களும்  உள்ளன . மகாமண்டபம் தற்போது கட்டப்பட்டது ஆகும் . கோயிலின் முன் கருடகம்பம் உள்ளது . இனி கல்வெட்டுகளைப் பற்றி காண்போம் .


1) வீரபாண்டியன் : கல்வெட்டுகள் :1, 2 ,4 ,11

                       கொங்கு நாட்டின் முதல் கொங்கு பாண்டியரனாக வீரபாண்டியன் (கி.பி 1202 - 1280) கருதப்படுகிறார் . "திரிபுவன சக்கிரவர்த்தி" "கோராசகேசரி வர்மன் " என்பது  வீரபாண்டியனின் பட்டப்பெயர் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது . முதலில் கோயில் கருவறையின் வடக்கு மற்றும் தெற்கு சுவற்றிலும் , முன்மண்டப வடக்கு சுவற்றிலும் உள்ள கல்வெட்டுகளை பற்றி காண்போம் . 

                 ஸ்ரீவீரசோழச் வளநாட்டு பிரமதேயம் கற்றாயங்காணி வீர சோழர் சதுர்வேதி மங்கலத்துச் சபையார், விஜயமங்கலம் சித்திரமேழி விண்ணகர நாயனார் கோயில் நம்பிமார்களுக்கும் ,ஸ்ரீ வைணவர்கட்கும் கொடுத்த கொடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது . கூடூர் ஊரார் , பெருமாளுக்கு நந்தா விளக்கு எரிக்க மாதம் தோறும் 3 நாழி எண்ணெய் சந்திர சூரியன் உள்ளவரை கொடுக்க ஒப்புக் கொண்ட கல்வெட்டும் ,  பெருமாள் அருளால் கண் பார்வை பெற்ற ஒருவர் நந்தவனம் கொடையளித்த கல்வெட்டும் உள்ளது .

      வடகரை நாட்டுக் குறிச்சியைச் சேர்ந்த வெள்ளாளரான வேந்தன் குல வேந்தன் வாமதேவன்  சந்தியா விளக்கு எரிக்க ஸ்ரீ யக்கி பழஞ்சலாகை 4 அச்சுக் கொடையாக கொடுத்தான் .கோயில் நம்பிமார் மூவர் விளக்கு எரிப்பதாக ஒப்புக்கொண்டனர் . ஸ்ரீ யக்கி காசு என்பது கொங்கு நாட்டில் சமண சமயம் செல்வாக்கு  பெற்ற காலத்தில் வெளியிடப்பட்ட காசு என்று கூறப்படுகிறது .காங்கய நாட்டுப் பரஞ்சேர் பள்ளி வேளாளர் ஆவகுல வீரகாமிண்டன் உடையாண்டான் என்பவர் மனைவி வாமதேவர் மகள் பிள்ளை அம்மை சந்தியா தீபவிளக்குக்கு ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்துள்ளார் .

2) வீரராசேந்திரன் கல்வெட்டு :

கல்வெட்டு 3

வீரரசேந்திரன் (கி.பி 1217) கொங்கு சோழர்களில் பெரும் புகழ் பெற்றவன் . வட கொங்கு தென் கொங்கு இரண்டையும் ஆண்ட பெருமை பெற்றவன் .இவன் ஆட்சி சுமார் 45 ஆண்டுகள் நீடித்ததாக கூறப்படுகிறது . இவன் கல்வெட்டுகள் கொங்கு நாட்டில் அதிகமாக கிடைக்கிறது .

இராசகேசரிவர்மரான திரிப்புவனச் சக்கிரவர்த்தி வீர ராசேந்திர தேவனின் 10 வது ஆட்சியாண்டில் கொடுக்கப்பட்ட கொடை இடக்கை சாதியார் 99 பேர் கொண்ட குழு பாதுகாப்பில் இருந்தது . விஜயமங்கலம் வெள்ளாள சாத்தந்தை குல சிறியான் தேவனான முடிகொண்ட சோழ மாராயன் அமுதுபடிக்கு மூலப்பொருளாக இருபத்து ஒன்பது ஆச்சு பண்டாரத்தில் வைத்தான் . இதன்மூலம் நாள்தோறும் நான்கு நாழி அரிசி அமுது செய்ய  அளிக்கப்பட்டது . சோழர் காலத்தில் இடங்கை வலங்கை பிரிவுகள் இருந்ததை இக்கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது .

3) சுந்தர பாண்டியன் (கி.பி 1308)

கல்வெட்டு 5, 6 ,7 ,8 , 10

          விஜயமங்கலத்து படைத்தலை வேளாளர் திருவானி பெரிய தேவனான வாணராயன் மற்றும் விச்சன் சீட்டனான தப்பிலாவாசகன் , பாண்டிய நாட்டைச் சேர்ந்த சூரியதேவனான குவலயத்தரையன் , விசயமங்கலத்துக் கைக்கோளரில் குமரன் எடுத்தானான சிங்கப்பெருமாள் , குன்றத்தூர் வேளாளர் கொள்ளிகுலச் சொக்கன் என்பவர் மனைவியும் உடையான் என்பவர் மகளுமான குப்பாண்டி ஆகிய நால்வரும் இக்கோயிலுக்கு சந்தியா தீபம் வைக்க பொன் ஓர் அச்சுக்காக பத்து பணம் மூலப்பொருளாக வைத்தார் . 

4) மூன்றாம் வீரவல்லாளன் (கி.பி 1327)

கல்வெட்டு 9 

கருமாணிக்க பெருமாளுக்கு பல நிவந்தத்திற்கு புன்செய் நிலமும், குளமும், குளத்து நீர் பாய்கின்ற வயல்களும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது .

5)இரண்டாம் விக்கிரமசோழன் ( கி.பி 1257)

கல்வெட்டு 12

படைத்தலை வேளாளர் நங்கன் என்பவர் தம் கொடையாக திருநிலைக்கால்

செய்தளித்தார்.

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இக்கோயிலின் வரலாற்றையும் பெருமையையும் உணர முடிகிறது .