Wednesday, December 9, 2020

மதுரை , தெப்பத்துப்பட்டி பொக்கிஷநாதர்கோயில்

மதுரை ,விக்கிரமங்கலம் - உசிலம்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது தெப்பத்துப்பட்டி பொக்கிஷநாதர் கோயில் .  பழமையான முழுக்கற்றளியாக  காணப்படும் இக்கோயில் பிற்கால பாண்டியர் கால கோயிலாக கருதப்படுகிறது.   இங்கு கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை . இக்கோயிலின் கருவறை விதானத்தின் வடகிழக்கு மூளையில் சதுரவடிவ ஓட்டை உள்ளதால் இதனை "ஓட்டை கோயில்" என்று இவ்வூர் மக்கள் அழைக்கின்றனர் . கருவறை பிற்கால பாண்டியர்கள்தாகவும் முன் மண்டபம் விஜயநகர காலத்தை சேர்ந்ததாகவும் கருதப்படுகிறது . விமானம் இல்லாமல் காணப்படும் இக்கோயிலின் கருவறை கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, காலபைரவர் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.  சப்தமாதர், விஷ்ணு ,துர்க்கை மற்றும் 5 அடி உயரம் உள்ள விநாயகர் ஒன்றும் இக்கோயிலில் காணப்படுகின்றன . 


 மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் சிறப்பே வெளியிலிருந்து பார்த்தால் கோயில் இருப்பது தெரியாதது போன்று அமைப்பு தான் . பாண்டியர்களின் முக்கியமான நகை ஆபரணங்கள் மற்றும் இதர பொக்கிஷங்களையும் பதுக்கி வைக்க இக்கோயிலை பயன்படுத்தினர் என்ற செய்தியும் செவி வழியாக  கூறப்படுகிறது .   இக்கோயிலின் பெயரும், அமைப்பும் அவ்வாறே உள்ளது . அழகான வேலைப்பாடுகள் உடன் காணப்படும்  இக்கோயிலுக்கு ,கோபுரமும் விமானமும் இல்லாமலிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது . பழமையாகவும் அழகாகவும் உள்ள இக்கோயிலுக்கு பராமரிப்பு குறைவாக உள்ளது .


















Gevi Krishnagiri

 Gevi

Krishnagiri





Tuesday, December 8, 2020

போடிநாயக்கனூர் அரண்மனை சிதம்பரம் கோயில் சுவர் ஓவியங்கள்

 தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கம் வெகு காலமாக இந்தியாவெங்கும் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெடி வெடிக்கும் நிகழ்வானது தீபாவளிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு மகிழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிகளிலும் வெடிப்பது தமிழகத்தின் ஒரு மரபாகவே இருந்து வருகிறது. கொண்டாட்ட நிகழ்வின் போது வெடிக்கும் பட்டாசுகள் பற்றிய ஓவியங்களை சில இடங்களில் காணமுடிகிறது . இது அன்றைய காலகட்டத்தில் எது மாதிரியான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன ,எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை நமக்கு காட்சிப்படுத்துகிறது .

அவற்றில் ஒன்று போடிநாயக்கனூர்  அரண்மனை மற்றொன்று  சிதம்பரம் கோயில் .


1) போடிநாயக்கனூர் அரண்மனை : 

                      தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள அரண்மனை வளாகத்தில் "லட்சுமி விலாஸ்" என்ற சித்திர மண்டபத்தில் ராமாயண ஓவிய தொகுப்புக்கள் வரையப்பட்டுள்ளன .இந்த ஓவியங்களில் ராமாயணம் ஆரம்பம் முதல் இறுதிவரை உள்ள காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அதில் ராமன்சீதையின் திருமணத்தின்போது சீதையை பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்லும் நிகழ்வினை  ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. அதில் அந்த பல்லக்கின் முன்னால் சிலர் வானவேடிக்கை நடத்துகின்றனர். . இந்த ஓவியங்கள் யாவும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்  போடி பங்காரு திருமலை நாயக்கர் என்ற மன்னரின் காலத்தில் வரையப்பட்டதாக கருதப்படுகிறது.


2)சிதம்பரம் கோயில்

                     சிதம்பரம்  நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமி அம்மன் சன்னதியின் முன் அமைந்த மகாமண்டபம் வண்ணமயமான ஓவியங்களால் நிரப்பப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் சைவசமயம் சார்ந்த பாடல்களை மையப்படுத்தி காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இங்குள்ள ஓவியத் தொகுதி ஒன்றில் வானவேடிக்கை விடும் காட்சி ஒன்று காணப்படுகிறது. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் ஆட்சி காலத்தில்  தமிழக ஓவியர்களால் வரையப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக அங்குள்ள ஓவிய தொகுதிகளில் காட்சிகளின் விளக்கம் வட்டார தமிழ் வழக்கப்படி எழுதப்பட்டுள்ளது.




 

Sunday, December 6, 2020

Sri lakshmi narasimhar temple , Marehalli

மாரெஹள்ளி (Marehalli ) என்னும் ஊர்  மைசூரிலிருந்து 53km தொலைவில் உள்ளது . இங்குள்ள பழமையான லக்ஷ்மிநரசிம்மர் கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டுள்ளது . இதன் பழைய பெயர் ராஜாச்சிரய ( rajasraya ) விண்ணகரம் . ராஜராஜசோழன், மேலைச்சாளுக்கிய மன்னரான சத்தியாசிரயனை வென்றதால் அவருக்கு "ராஜாச்சிரயன்" என்ற பட்டப்பெயர் சூட்டிக்கொண்டார் .  தன் பெயராலேயே இங்கு ஒரு கோயில் கட்டி  அதற்கு ராஜசிரய விண்ணகரம் என்றும் பெயர் வைத்தார் .  சோழர்கள் காலத்தில் கருவறை மட்டும் கட்டப்பட்டது . பின்பு இப்பகுதியை ஆண்ட ஹொய்சாலர் , விஜயநகர பேரரசுகள் மற்றும் மைசூர் உடையார்கள் இக் கோயிலை புனரமைத்து உள்ளனர் . 

இக்கோயிலில் கருவறை மட்டுமே ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு உள்ளது  . முகமண்டபம் , பிரகாரத்தில் உள்ள தூண்கள்  சோழருக்குப் பின் ஆட்சி செய்த  ஹொய்சால , விஜயநகரப் பேரரசுகளால் கட்டப்பட்டு உள்ளது .  இக்கோயிலில் 108 தூண்கள் உள்ளன. இக்கோயிலில் உள்ளே பூமாதேவி , நிலா தேவி ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன . கோயிலுக்கு வெளியே பிற்காலத்தில் கட்டப்பட்ட சிவன் ஆலயம் உள்ளன .

இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் எதுவும் இல்லை . ஹொய்சால மன்னர் விஷ்ணுவர்தனின் தமிழ் மற்றும் கன்னட கல்வெட்டுகள் உள்ளன . கி.பி. 1148 ஆம் ஆண்டு   வடகரை நாட்டை சேர்ந்த காஞ்சனுரை தேவதானமாக கொடுக்கப்பட்டதாக விஷ்ணுவர்தன் கல்வெட்டு கூறுகிறது . விஷ்ணுவர்தன் காலத்தில் இக்கோயில் "சிங்கப்பெருமாள் கோயில்" (நரசிம்ம - சிங்கம் ) என்று அழைக்கப்பட்டது.
விஜயநகரப் பேரரசு மற்றும் மைசூர் வாண்டையார் ஆகியோரின்  கன்னட கல்வெட்டுகள் உள்ளன . இக்கோயில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள முக்கிய வைணவ தலங்களில் இதுவும் ஒன்று .









Saumyakesava perumal temple , Nagamangala , Mandya district

 நாகமங்களா , மாண்டியா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் ஆகும் .  இவ்வூரின் மையப்பகுதியில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த "சௌமியகேசவ" கோயில் அமைந்துள்ளது .  நாகமங்களா , கங்கர் காலத்தில்  கல்கனி நாடு என்று அழைக்கப்பட்டது  . 

ஹொய்சால மன்னரான பிட்டிதேவன் முதலில் சமணராக இருந்து , பின்னர் ராமானுஜரால் வைணவத்தின் மீது பற்று கொண்டு வைணவராக மாறி  தன் பெயரை விஷ்ணுவர்தன் என்று மாற்றிக்கொண்டார் . இவர் காலத்தில்  கர்நாடகாவில் வைணவம் தழைத்து  இருந்தது .  இவர் வழி வந்த இவரது பேரனான இரண்டாம் வீர வல்லாளன் (1173) , நாகமங்களாவில் வைணவ கோயில் கட்டினார் .  இக்கோயில்  " வீர வல்லாள சதுர்வேதி பட்டாரநகர" என்று முதலில் அழைக்கபட்டது . காலப்போக்கில் இப்பெயர் மருவி சௌமிய கேசவ கோயில் என்று அழைக்கப்பட்டது. மற்ற ஹொய்சாளர் கோயில்களை போல் அல்லாமல் கலைப் பணியில் இக்கோயில் முழுமையடையாமல் இருக்கிறது .  கருவறையின் முன்பு உள்ள தூண்களில் , நான்கு தூண்கள் வட்ட வடிவத்திலும் , இரண்டு தூண்கள் மிக அழகிய வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. பல கோணங்களில் அமைந்த மேடையின் மீது கோயில் கட்டப்பட்டுள்ளது .  மேடையின் மேற்பகுதி வலம் வரும் பாதையாக பயன்படுகிறது . பின் வெளிப்புறத்தில் மற்ற கோயில்களில் காணப்படும் ஹொய்சாலர்களின் சிறப்பு சிற்பங்கள் இங்கு இல்லை . 

ஹொய்சாளர்களை தொடர்ந்து இப்பகுதியை ஆண்ட விஜயநகர பேரரசு முகமண்டம் அமைத்து இக்கோயிலை விரிவுபடுத்தினர்.  கல்வெட்டுகளில் மூலவரை சென்னக்கேசவா என்று குறிப்பிடப்பட்டுகிறது . இக்கோயில் மாண்டியா மாவட்டத்தின்  முக்கியமான வைணவத் தலம் ஆகும் .











கோத்தகிரி தேனாடு நடுகல்

 ஊர்ச்சண்டையில் இறந்த வீரனுக்கான நடுகல்..

ஸ்ரீசப்தகன்னியர்திருக்கோயில்

தேனாடு ,

ஒசகேரி

கோத்தகிரி




ஜான் சல்லிவன் , கோத்தகிரி

 நீலகிரியில் உள்ள கோத்தகிரி "இந்தியாவின் சுவிஸர்லாந்த்" என்று அழைக்கப்படுகிறது . இங்குள்ள தட்பவெட்ப நிலையும் சுவிஸர்லாந்தின் தட்பவெட்ப நிலையும் ஒரே மாதிரி இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது . உலக சுற்றுலா வரைபடத்தில் நீலகிரி மாவட்டம் இடம் பெற காரணமாக இருந்தவர் ஜான் சல்லிவன் . இவரே நீலகிரியின் தந்தை என  போற்றப்படுகிறார் .

1819 ஆம் ஆண்டு கோத்தகிரி , கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது . ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை கலெக்டராக இருந்தவர் ஜான் சல்லிவன் .15 ஜூன் 1788 ஆண்டு லண்டனில் பிறந்த இவர், கிழக்கிந்திய கம்பெனியின் ரைட்டராக சேர்ந்து பின் 1816ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டர்ராக பணியாற்றினார் .  பின் 1815 - 1930 வரை கோவை கலெக்டராக பணியாற்றினார் . இவர் காலத்தில் நீலகிரிக்கு வர போதிய வசதி இல்லாத காரணத்தாலும் , அடர்ந்த வனப்பகுதியாளும் இங்கு வாழ்ந்த மக்களுக்கு வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருந்தனர் . இந்த பகுதியின் இயற்கை சுற்றுச்சூழல் ஜான் சல்லிவன் அவர்களை மிகவும் கவர்ந்ததால்  திம்பட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கன்னேரிமுக்கு என்னுமிடத்தில் கேம்ப் ஆபீஸ் அமைத்தார் . இதுவே உதகையின் முதல் அரசு அலுவலகம். இதற்குப் பின்னரே உதகையில் உள்ள ஸ்டோன் ஹவுஸ் கட்டப்பட்டது.   ஊட்டியுள்ள மிகப்பெரிய ஏரியும் இவரால் உருவாக்கப்பட்டது . மேலும் மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார்.

இவரின் வருகைக்குப் பிறகே ஊட்டியில் தேநீர்  மற்றும் கேரட் , பீட்ரூட் ஆகியன பயிர் செய்யப்பட்டன .  கோத்தகிரியின்  பொருளாதார வளர்ச்சிக்கு இவரே காரணம் . நீலகிரி வரலாற்றில் ஜான் சல்லிவனுக்கு முக்கிய இடம் உண்டு .